தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பாலுடன் சில உணவுப்பொருளை சேர்த்து சாப்பிடுவது தவறானது'

2 mins read
13ffb53a-a658-4dae-bfeb-dae533cf5735
படம்: இந்திய ஊடகம் -

பாலும் பால் பொருட்­களும் ஊட்­டச்­சத்து மிகுந்த ஆரோக்­கி­ய­மான உண­வா­கும். இதில், இயற்கை ஊட்­டச்­சத்­து­க­ளான கால்­சி­யம், பொட்­டா­சி­யம், லாக்­டின் (புர­தம்), லாக்­டோஸ் (இரட்­டைச் சர்க்­கரை) உள்­ளிட்­டவை அடங்­கி­யுள்­ளன.

உல­க­ள­வில் இந்­தப் பால், தயிர், வெண்­ணெய், நெய் உள்­ளிட்ட பால் பொருட்­களை ஆறு பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் பயன் படுத்தி வரு­கின்­ற­னர்.

நம்­மில் பல­ருக்­கும் மில்க் ஸ்வீட், மில்க் ஷேக், சாக்­லேட் மில்க், பாதாம் மில்க் மிக­வும் பிடிக்­கும்.

பாலை பல­ரும் சூடா­கவோ அல்­லது குளி­ரா­கவோ பருக விரும்­பு­கி­றார்­கள். சிலர் பாலு­டன் சாக்­லேட்­டை­யும் வாழைப்­ப­ழத்­தைச் சேர்த்து உட்­கொள்­வார்­கள். பால் செரிமானம் ஆ­வ­தற்கு அதிக நேர­மா­கும். பாலில் உள்ள லாக்­டோஸ் சில­ருக்கு ஒத்­துக்­கொள்­ளாது.

இத­னால், எந்த உண­வோடு எதைச் சேர்த்­துச் சாப்­பி­ட­லாம், எதைச் சாப்­பி­டக் கூடாது என்­பதை தெரிந்து வைத்­தி­ருப்­பது அவ­சி­யம். பாலு­டன் ஒரு­சில உண­வுப் பொருட்­க­ளைச் சேர்த்து சாப்­பி­டு­வது உட­லுக்கு தீங்கு விளை­வித்து­வி­டும் என்­கி­றார் மும்­பை­யைச் சேர்ந்த மருத்­து­வர் பிரீ­தம் மூன்.

மீன்-பால், இறைச்சி:

பால் குளிர்ச்சி தன்மை கொண்­டது. மீன், வெப்­பத்­தன்மை கொண்­டது. இவை இரண்­டும் சேர்ந்த கல­வை­யா­னது உட­லில் சம­நி­லை­யின்­மையை உரு­வாக்­கும். அதேேபால், அதிக புர­தச் சத்­துள்ள இறைச்சி செரி­மா­னம் ஆவ­தற்கு பல மணி நேரம் எடுத்­துக் கொள்­ளும். பாலும் எளி­தில் சீரணிக்கக் கூடி­யது அல்ல. இவை இரண்­டை­யும் சேர்த்து உண்­டால் உடல் பாதிப்பு ஏற்­படும். மீன், இைறச்­சி­யு­டன் தயி­ரை­யும் சேர்த்து சாப்­பி­டக் கூடாது. அது தோல் நோய்­கள் ஏற்­ப­ட வழி­வ­குக்­கும்.

பால்-வாழைப்­ப­ழம், ஸ்ட்­ரா­பெர்ரி, முலாம்பழம்:

பால்-வாழைப்­பழ மில்க்-ஷேக் உட­லுக்கு மிக­வும் சத்து என்று கூறு­வார்­கள். இது முற்­றி­லும் தவ­றான கருத்து. அப்­படி சாப்­பி­டு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும். பால் மிக­வும் குளிர்ச்­சி­யான உணவு, வாழைப்­ப­ழம் சூடான உணவு. இவை இரண்­டை­யும் சேர்த்­துச் சாப்­பி­டு­வ­தால் செரி­மா­னத்­தில் பிரச்­சினை ஏற்­பட்டு சோர்­வாக உணர்­வீர்­கள். ஸ்ட்­ரா­பெர்ரி, முலாம் பழத்­து­டன் (Muskmelon) பாலைச் சேர்த்து சாப்­பி­டு­வது தவறு. இது உட­லில் நச்­சுத்­தன்­மையை உண்­டாக்­கி­விடும். வாந்­திக்­கும் வித்­தி­டும் என்­கி­றார் டாக்­டர் பிரீ­தம்.

முள்­ளங்கி-பால்:

ஆயுர்­வே­தத்­தின்­படி முள்­ளங்­கியை உண்­ட­பி­றகு பால் சாப்­பி­டக் கூடாது. ஏனெ­னில், அது பொருந்­தாத உண­வுக்­க­ல­வை­யாக கரு­தப்­ப­டு­கிறது. முள்­ளங்கி சாப்­பிட்ட இரண்டு மணி நேரத்­துக்கு பிறகு பால் பரு­க­லாம்.

பால்-எலு­மிச்சை:

எலு­மிச்சஞ்சாறு குடித்­ததை மறந்து சிறிது நேரத்­தில் பாலை பரு­கி­னால் குட­லில் ஒவ்­வாமை ஏற்­பட்டு செரிமான மண்­ட­லம் பாதிப்­ப­டை­யும். ஏனெ­னில், எலு­மிச்­சை­யில் உள்ள அதிக 'சிட்­ரிக்' அமி­லத் தன்மை பாலு­டன் சேர்ந்து வேதி மாற்­றங்­கள் அடைந்து உடல் பாதிப்பு ஏற்­பட கார­ண­மா­கிறது. இது நெஞ்­செ­ரிச்­சலை வர­வ­ழைத்து, உடல் ஆரோக்­கி­யத்தை சீர்­கு­லைத்­து­வி­டும் என்­கி­றார் மருத்­து­வர் பிரீ­தம்.