மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு

மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு

3 mins read
11f71b8c-a535-4302-8179-a172e43ff308
பொங்கோல் பூங்காவில் சைக்கிளோட்டம். நடையும் சைக்கி ளோட்டமும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் எளிய பயிற்சிகள்.வீட்டிலிருந்தே நடன மாடுவது, தைசீ போன்ற எளிமையான தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது, யோகா உள்ளிட்ட பயிற்சிகளி லும் ஈடுபடலாம். முழு உடலுக்கு அசைவும் தசைகளுக்கு வலுவும் தரக்கூடிய நடவடிக்கை யில் தினமும் 30 நிமிடங்கள் செலவிடு வது கட்டாயம். -
multi-img1 of 3

கொரோனா கிரு­மிப் பர­வல் சூழ­லில் பல நிறு­வ­னங்­கள் வீட்­டி­

லிருந்து பணி­யு­ரி­யும் முறைக்கு மாறி­விட்­டன. இது ஒரு­வ­கை­யில் மக்­களை வெளியே செல்­ல­வி­டா­மல் நோய்த் தொற்­றி­லி­ருந்து காக்­கும் என்­றா­லும், வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­ப­தால் போது­மான உடல் உழைப்­புக் கிடைப்­ப­தில்லை. இது ஒரே இடத்­தில் முடக்­கி­விடுவிடு­கிறது. பல மணி நேரம் ஒரே இடத்­தில் அமர்ந்து வேலை பார்ப்­பது உட­லுக்­கும் மன­துக்­கும் சோர்வை ஏற்­ப­டுத்­து­கிறது.

மனமும் உடலும் உற்சாகமாக இருக்கவும் நலத்தோடு இருக்கவும் அன்றாடம் 30 நிமி­டங்­க­ளா­வது உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவ­சி­ய­மான ஒன்று. உடற்பயிற்சி உண்மையிலேயே மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு. அதைப் பழக்கத்துக்குக் கொண்டுவந்து விட்டால் போதும்.

சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் வீட்டில் இருந்து வேலை செய்ததால் அல்லது படித்த தால் குறைவாகவே நகர்ந்துள்ளனர். இது இயல்பாகவே அவர்களின் உடல் செயல்பாட்டைப் பாதித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய மக்­கள்­தொகை உடல்­நல ஆய்வு அறிக்கை சென்ற 2021ஆம் ஆண்டு நவம்­பரில் வெளி­யி­டப்­பட்­டது. இதன்­படி, சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒரு வார உடல் உழைப்பில் 49.6 விழுக்­காடு போக்குவரத்திற்கே செல விடப்பட்டுள்ளது.

இது­பற்­றிக் கூறும் பார்க்வே ஷென்­டன்வே மருத்­துவ குழு­மத்­தைச் சேர்ந்த டாக்­டர் ஹோ வான் சின், ஒரே இடத்­தில் முடங்­கிக் கிடக்­கா­மல் ஒரு­வர் அங்கு இங்­கும் சென்று சுறு­சு­றுப்­பாக இருப்­ப­தற்கு 'ஃபிட்னஸ் டிரேக்­கர்' முறை­யைக் கையா­ளும்­படி அறி­வு­றுத்­து­கி­றார்.

"ஒரே இடத்­தில் நீங்­கள் முடங்­கிக் கிடக்­கும் வாழ்க்கை முறையை நீங்­கள் கடைப்­பி­டிப்­ப­வ­ராக இருந்­தால், தொடக்­க­மாக எளி­தில் செய்­யக்­கூ­டிய 5,000 அடி நடைப்­ப­யிற்­சி­யில் இறங்­குங்­கள். பின்­னர் ஒவ்­வொரு வார­மும் 1,000 அடிகளை கூட்­டிக்­கொண்டே செல்­லுங்கள்," என்று கூறும் இவர் ஒரு­வர் குறைந்­தது நாள் ஒன்­றுக்கு 7,000 அடி நடந்­தால் அவ­ரின் வாழ்­நாள் அதி­க­ரிக்­கும் என்று கூறு­கி­றார்.

இது தவிர, ஒரு­வர் வேறு வகை­யான எளி­தான உடற்­ப­யிற்­சி­க­ளி­லும் பலன் பெற­லாம். அதி­லும் வீட்­டுக்கு வெளியே செல்ல முடி­யா­த­வர்­கள் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே சில பயிற்­சி­களை செய்­ய­லாம்.

1. 'புஷ் அப்ஸ்'- இதை ஆண்­களும், பெண்­களும் என இரு­வ­ருமே செய்­ய­லாம். தொப்­பையை குறைக்க உத­வும். கைகளில் இருக்­கும் தேவை­யற்ற சதையை கரைக்க உத­வும். தரை­யில் பாதி­ய­ள­வில் படுத்­த­வாறு கைக­ளா­லும் கால்­க­ளா­லும் உடம்பை தாங்­கிய நிலை­யில் இருங்­கள். கைகளை தோள்­களை விட சற்று அக­ல­மாக வைத்­தி­ருங்­கள். உங்­கள் மார்பு கிட்­டத்­தட்ட தரை­யைத் தொடும்­வரை உடலை கீழே இறக்கி பின் உடம்பை மேலே தள்­ளுங்­கள். இதை தொடர்ந்து செய்­தல் உடல் நல­னுக்கு நல்­லது.

2. சிறிய பயிற்­சி­க­ளாக யோகா, ஆச­னங்­கள் செய்­தல் ஆகி­யவை வீட்­டி­லேயே சிறிது நேரம் காலை மாலை இரு வேளை­யும் செய்­ய­லாம். தியா­னப் பயிற்­சி­கள் மற்­றும் யோகா­ச­னப் பயிற்­சி­கள் செய்­வது உட­லின், மன­தின் அனைத்­துச் செயல்­பா­டு­க­ளுக்­கும் நலன் பயக்­கும். இவற்­றைக் கற்­றுக்­கொ­டுக்­கும் பயிற்சி மையங்­க­ளுக்­குச் சென்று முறை­யாக கற்­றுக் கொள்­வது கூடு­தல் பலன் அளிக்­கும்.

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்களுக்கு இயன்ற வகையான நடைப்பயிற்சியை தேர்வு செய்யலாம்.

மெதுவாக நடப்பது

இது எப்போதும் நடக்கும் சாதாரண வேகமில்லாத, சிரம மில்லாத நடையாகும்.

இந்த வகை நடைப்பயிற்சி உடல் வலி, சோர்வுகளைப் போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இளகு வாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் பருமன் உள்ள வர்களுக்கு ஏற்ற நடையாகும் இது.

வேக நடை

கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இவ்வாறு வேகமாக நடப்பதால் உடம்பில் வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுறுசுறுப்பு அதிகமாகும்.

தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று நமது உடலுக்கும் மனதுக்கும் தன்னம் பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

இந்த வேக நடைப்பயிற்சி நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை யாகும்.

மெதுவோட்டம்

நடக்­கும் முறை­யில் இருந்து சற்று வித்­தி­யா­சப்­பட்டு மித­மாக, மிக மிக மெது­வான ஓட்­ட­மாக மாறும். அத­னால் நிறைய ஆக்­ஸி­ஜன் நுரை­யீ­ர­லுக்­குள் சென்று ரத்­தத்தை சுத்­தப்­ப­டுத்தி இத­யத்­திற்கு அனுப்­பு­கிறது.

அதே­ச­ம­யம் தேவை­யில்­லாத கழி­வுப்­பொ­ருட்­களை வெளி­யேற்றி உடம்­பில் உள்ள ஓவ்வோர் அணு­வை­யும் சுத்­தம் செய்­யும்.