இன்றைய சூழலில், பெண்களைக் கவரும் ஆடைகளில் சுடிதாருக்கும் முக்கிய பங்குள்ளது. பெண்கள் தங்களது நிறத்திற்கு ஏற்றார்போல் உடைகளைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், உடல்வாகுக்கு ஏற்ற சுடிதார்களை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் ஆடை வடிவமைப்பு நிபுணர்கள்.
தாங்கள் எப்போதுமே அழகாக இருக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள், தங்களுக்கு அதிகம் பிடிக்கும் நகைகள், துணிகள், அழகு சாதனப் பொருட்களுக் கும் தயங்காமல் அதிகம் செலவு செய் கின்றனர்.
தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் புது வரவாக வும் புதிய வடி வமைப்புடன் இருக்கவும் பிரியப்படுகின்றனர்.
அவர்களது விருப்பத்துக்கு ஏற்றாற்ேபால், சந்தைகளில் இப்போது ஏகப்பட்ட ரகங்களில் சுடிதார்கள் குவிந்துள்ளன. அனார்கலி, ஷார்ட், ஃப்ளேர்டு, ஸ்கின் ஃபிட், பதானி, பாட்டியாலா, ட்ரௌஸர் ஸ்டைல், பளாஸோ சுடிதார் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
முதலில் நாம் எடுக்கும் சுடிதார் நமது உடல்வாகுக்கும் நமது நிறத்துக்கும் ஒத்துவருமா என பார்த்தபின்னரே அதை வாங்கவேண்டும் என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள்.
கறுப்பு நிறமாக உள்ளவர்கள், 'லைட்' நிறத்தில் உள்ள கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய சுடிதாரைத் தேர்ந்தெடுக்கலாம். இளம் பச்சை, எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் நிறம், இள ஊதா, இள சந்தன வண்ணத்தில் உள்ள சுடிதார்களைத் தேர்வு செய்யலாம்.
கொஞ்சம் நல்ல நிறத்துடன் உள்ளவர்களும் மாநிறமாக உள்ளவர்களும் மெரூன், இங்க் புளூ, ரோஜா(பிங்க்) நிறம், சாம்பல் நிறத்தை தேர்ந்து எடுக்கலாம்.
நல்ல நிறமாக உள்ளவர்கள் அழுத்தமான நிறத்தில் எந்த சுடிதார் போட்டாலும் அழகாகத் தெரியும். உடல் பருமனாக உள்ளவர்கள் பருத்தியாலான சுடிதார் அணிந்தால் அது மேலும் பருமனாகத்தான் காட்டும். அதற்குப் பதில், அவர்கள் எளிமையான சுடிதார்களைப் போட்டாலே அழகாகத் தெரியும்.
ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய பருத்தி அல்லது பட்டுப் பருத்தியால் ஆன சுடிதாரைத் தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று உடல் பருமனாகக் காட்டும்.
முடிந்தவரை, சுடிதார்களை 'அம்பர்லா' மாடலில் அணிந்தால் பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாகத் தெரியும் என்கின்றனர் ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள்.
தினந்தோறும் அணிவதற்கு ஏற்றவை பருத்தியாலான சுடிதார்கள்.
காட்டன் சில்க் துணியானது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை தரும். இதுபோன்ற சில்க் காட்டனில் உடல்வாகிற்கு ஏற்றாற்போல் தைத்து அணியப்படும் சுடிதார்கள் பளபளப்பாகவும் ஆடம்பரமாகவும் கல்யாணம், வரவேற்புக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாக இருக்கின்றன.
இந்தியாவில் பஞ்சாப் மாநிலப் பெண்களின் பிரத்தியேக மாடல் என்று ஷார்ட் சுடிதார் வகையைச் சொல்லலாம். ேமல்சட்டை முட்டிக் கால்களுக்கு மேல் இருப்பது போன்று தைக்கப்படும். கழுத்தைச் சுற்றியும் வயிறுவரை நீண்டும் 'டிசைன்' செய்யப்பட்டிருக்கும். அதே போல் சட்ைடயின் கீழ்ப்புறம் பட்டையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்கும் அணிவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
படங்கள்: ஊடகம்

