கலையுணர்வைக் கூட்டும் இரவு நேர ஒளியூட்டு விழா 2022

கலையுணர்வைக் கூட்டும் இரவு நேர ஒளியூட்டு விழா 2022

1 mins read
bf92e33e-edb5-43aa-88b1-098f9b4888f4
-

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூர் கலை விழா 2022ஐ முன்­னிட்டு சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டம் அதன் குடிமை வட்­டா­ரப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து, 'லைட் டு நைட்' என்ற இரவு நேர ஒளியூட்டு விழாவை இம்­மாதம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இவ்­வி­ழா­வில், கண்­க­வர் காட்­சி­யகங்­களும் புதிய இரு­வழி தொடர்­பு­டைய கலைப்­ப­டைப்­பு­களும் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன.

"புதிய வழி­களில் நோக்­கு­தல், சிந்­தித்­தல், இருத்­தல்' என்ற கருப்­பொ­ரு­ளில் அமைந்­துள்ள இந்த ஆண்­டின் இரவு நேர ஒளியூட்டு விழா, குடிமை வட்­டா­ரத்­துக்கு ஒளி­யூட்டி அழ­கு சேர்க்­க­ உள்ளது.

'அக்­யூட் ஆர்ட்' கலை­ய­கம் தயா­ரித்­துள்ள இணைப்பு நிஜ­மாக்­கக் கண்­காட்சி, முக்­கி­ய கட்­ட­டங்­களின் மேற்­ப­ரப்­பில் காணப்­படும் ஒளிக்­காட்­சி­கள், கலைக்­கூ­டத்­தில் இடம்­பெ­றும் நேரடி இசை உள்ளிட்ட சுவா­ர­சி­ய­மான அங்­கங்­கள் இம்­முறை இடம்­பெ­றும்.

உள்­ளூர், வெளி­யூர் கலை­ஞர்­களின் பல்­லு­ணர்­வுத் ­தன்­மை கொண்ட படைப்­பு­களை மக்­கள் கண்டுகளிக்­க­லாம். சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு பகு­தி­களில் நடக்­க­வி­ருக்­கும் 'லைட் டு நைட்' விழா காலை­யி­லும் மாலை­யி­லும் இம்­முறை இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது. ஆக பிரம் மாண்டமான ஒளியூட்டு விழாவாக இவ்வாண்டின் விழா திகழும்.

படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்