தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கூகல் மீட்' திருமணம், 'சோமேட்டோ' விருந்து, 'ஜிபே' மூலம் மொய்ப்பணம்

2 mins read
1e87791e-76e4-4199-abbd-38784a797afa
வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்த திட்ட மிட்டுள்ள சந்தீபன் சர்க்கார், அதிதி தாஸ். படம்: ஊடகம் -

இந்­தி­யா­வின் மேற்கு வங்க மாநி­லத்­தில் புதி­தாக திரு­ம­ண­மாக உள்ள ஒரு காதல் ஜோடி, தங்­க­ளது திரு­ம­ணத்தை மிக­வும் வித்­தி­யா­ச­மான முறை­யில் இணை­யம் மூல­மாக நடத்த உள்­ள­னர்.

இவர்­க­ளது திரு­ம­ணம் 'கூகல் மீட்' மூலம் நடக்­க­வுள்­ளது. இந்த கூகல் சந்­திப்­பில் கலந்­து­கொள்­ளும் நண்­பர்­கள், உற்­றார் உற­வி­னர்­க­ளுக்கு சோமேட்டோ (Zomato) மூலம் விருந்து வைக்க உள்­ள­னர்.

அத்­து­டன், தங்களது மொய் அன்­ப­ளிப்­பு­களை 'ஜி-பே' வழி­யில் பெற­வும் அசத்­தலான முடிவு ஒன்றை எடுத்­துள்­ள­னர்.

கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், திரு­ம­ணம் உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

கூகல் மீட்­டில் திரு­மணம்

இந்­நி­லை­யில், மேற்கு வங்­கத்­தைச் சேர்ந்த சந்தீபன் சர்க்­கார், அதிதி தாஸ் ஜோடி, இம்மாதம் 24ஆம் தேதி திரு­மணத்தை நடத்­த­வுள்­ள­னர். இவர்­கள் 100 பேரை மட்­டுமே நேரில் பங்­கேற்க அழைத்­துள்­ள­னர்.

அதே­ச­ம­யத்­தில், தங்­க­ளது உற­வி­னர்­கள், நண்­பர்­கள் என 350 பேரை 'கூகல் சந்­திப்பு' மூலம் திருமணத்­தில் கலந்­து­கொள் வதற்கு வரவேற்றுள்ளனர்.

நாட்­டின் பல்­வேறு பகு­திகளி லும் வசிக்கும் இந்த 350 பேருக்­கும் சோமேட்டோ நிறுவனத்தின் உணவு விநியோகம் செய்வதற்கும் ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

தள்­ளிப்போன திரு­ம­ணம்

இது­கு­றித்து மண­ம­கன் சந்தீபன் சர்க்­கார் கூறு­கை­யில், "கடந்த ஆண்டே எங்­க­ளின் திரு­ம­ணம் நடந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா தொற்­றால் நானும் பாதிக்­கப்­பட்டு, கடந்த 10ஆம் தேதிக்குப் பிறகே குண­ம­டைந்­தேன்.

"எனவேதான், திரு­ம­ணம் என்ற பெய­ரில் எனது உற­வி­னர்­களை­யும் அழைத்து, அவர்­களது நிலை­மையையும் மோச­மாக்க விரும்பாமல், அவர்களை இணை­யத்­தின் வழி ஒன்­றி­ணைக்க முடிவு செய்­தோம்.

"அது மட்­டு­மின்றி, அவர்­கள் அனை­வ­ருக்­கும் சோமேட்டோ மூலம் உணவு விநி­யோ­கம் செய்­ய­வும் ஏற்­பாடு செய்­துள்­ளோம்," எனத் தெரி­வித்தார்.

உற­வி­னர்­க­ளின் பாது­காப்பு

"கொவிட்-19 சூழலில், நேரில் வந்து திரு­மண நிகழ்வில் கலந்துகொள்ள நிச்­ச­யம் பல பேர் தயங்­கு­வார்­கள். இத­னால், நாங்­கள் போட்­டுள்ள திட்­டம்தான் சிறந்­தது. எங்­க­ள் விருந்­தி­னர்­களின் உயி­ருக்­கும் அது பாது­காப்­பாக இருக்­கும்," என்று மணப்­பெண் அதிதி கூறினார்.

நம்­பிக்கை அளிக்­கும் ஜோடி

இனி­வ­ரும் காலங்­களில், வெர்ச்­சு­வல் திரு­ம­ணம் (Virtual Marriage) புது­மை­யான ஒன்­றாக மாறும் என்­றும் எங்­க­ளின் வழியை அதி­கமானோர் பின்­பற்­று­வார்­கள் என்­றும் சந்தீபன்-அதிதி ஜோடி நம்­பிக்கைத் தெரி­விக்­கின்­ற­னர்.