சீன பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு புலி ஆண்டு. அதைச் சிறப்பிக்கும் வண்ணம் புலியைக் கருப்பொருளாகக் கொண்டு சிங்கப்பூர் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரும் புலி உருவங்களைக் காணலாம்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில் பாதுகாப்புடன் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விடுமுறை நாட்களில் அதிகம் வெளியே செல்லாமல் பாதுகாப்புடன் இருங்கள் சிறுவர்களே!
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் சுலோங் என்ற 10 வயது ஆண் மலேயன் புலி மரத்தில் பட்டாசு போன்ற கூண்டிற்குள் இருக்கும் உணவை எடுக்க முயல்கிறது.

