கவலையற்ற வாழ்க்கைமுறையை பின்பற்றிவரும் வழக்கறிஞர்

கவலையற்ற வாழ்க்கைமுறையை பின்பற்றிவரும் வழக்கறிஞர்

4 mins read
af892b1b-e238-4ee5-a192-23f4c929dcfa
தமது முதல் காதலாக இருந்தது இசைதான் என்கிறார் திரு இந்திர ராஜ். படம்: திமத்தி டேவிட் -

ஆ. விஷ்ணு வர்­தினி

வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­யாற்றி வரும் திரு ஜெய­ராஜ் இந்­திர ராஜுக்கு 68 வயது ஆகிவிட்டபோதும், தம்மை­யும் தம்மைச் சுற்றி உள்­ளோ­ரை­யும் சிரத்­தை­யோடு பேணி, தம்மை இன்­னும் திட­காத்­தி­ர­மாக வைத்­துக்­கொள்­ளும் ஆரோக்­கி­ய­மான பல பழக்­க­வ­ழக்­கங்­களை மேற்­கொண்டு இள­மை­யு­டன் திகழ்­கி­றார்.

திரு இந்­திர ராஜின் நாளா­னது அனைத்து வார நாள்­க­ளி­லும் விடி­காலை ஐந்து மணிக்­குத் தொடங்­கு­கிறது. இவ­ரும் இவ­ரின் மனை­வி­யும் காலை­யில் நீந்­தச் சென்­று­விட்டு, பின்­னர் தங்­க­ளது அலு­வல்­க­ளைத் தொடங்­கு­வர்.

1989ஆம் ஆண்­டி­லி­ருந்தே கிட்­டத்­தட்ட தின­மும் நீந்­தும் பழக்­கத்­தைக் கடைப்­பி­டித்து வரு­வ­தா­கக் குறிப்பிட்ட இவர், இதனை தமக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது தம் மனைவி திருவாட்டி மேரி அங் லுவாங் சூதான் என்­றும் பகிர்ந்­து­கொண்­டார். இள­மை­யில் தமக்கு வந்த மூச்­சுத்­தடை நோயைக் கருதி நீச்­சல் கற்­றுக்­கொண்ட இவர், தற்­போது அதை உத்­வே­க­மூட்­டும் நல்ல வாழ்­வி­யல் பழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார். திங்­கள் முதல் வெள்ளிவரை தின­மும் 1,100 மீட்­டர் நீந்துகின்றார் இவர்.

இள­மை­யி­லி­ருந்தே குடும்­பப் பொறுப்­பு­க­ளைக் கவ­னிக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­டி­ருந்­தார், நான்கு சகோ­த­ரர்­களில் மூன்­றா­வ­தாக விளங்­கும் திரு இந்­திர ராஜ். குடும்ப நலனே இவர் எடுத்­த பல வேலைசார்ந்த முடி­வு­க­ளுக்­குக் கார­ண­மாய் இருந்­தது.

கடந்த இரு­பதாண்­டு­களுக்­கும் மேலா­கத் தாம் பணி­பு­ரிந்­து­வரும் சட்ட நிறு­வ­ன­மான 'ஹரோல்ட் சீட் அண்ட் இந்­திர ராஜ்', தம் கூட்­டாளி ஹரோல்ட் சீட்­டுடன் சேர்ந்து திரு இந்திர ராஜ் தொடங்­கி­ய­தாகும்.

அதன் உரு­வாக்­கத்­திற்கு முன்­னர் ஒரு சில சட்ட நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்த திரு இந்­திர ராஜ், அச்­ச­ம­யத்­தில் குடும்­பத்­துக்கு நேரம் ஒதுக்கவியலா அள­விற்கு வேலைப் பளு இருந்­த­தாக உணர்ந்­தார். உறவு­க­ளைப் பேணு­வ­தற்கே முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்­டும் என்ற தமது கொள்கையின் அடிப்­ப­டை­யில், தமக்­கேற்ற வேலைப்­பளுவுடன் கூடிய, அத்தகைய சுதந்­தி­ரத்­தைக் கொடுக்க முடிந்த வேலை­யி­டத்தை உரு­வாக்­கிக்­கொண்­டார்.

"1989ஆம் ஆண்­டில் வேலைப்­பளு கார­ண­மாக எனக்கு மூச்­சுப் பிரச்சினை ஏற்­பட்­டது. அப்­போது நான் பழ­கிக்­கொண்ட நீச்­சல் எனது வாழ்க்­கை­யைப் பேரளவில் மாற்­றி­யது. உடற்­ப­யிற்சி செய்யாத என்­னு­டை­ய பல நண்­பர்­கள் அதிக மனஉளைச்­ச­லோடு காணப்­ப­டு­வர். அவர்­கள் என்­னைக் காணும்­போதெல்­லாம் எனது சுருக்­கங்­களற்ற சரு­மத்­தை­யும் சோர்­வற்ற நடத்­தை­யை­யும் பற்றி வியந்து கேட்­பர். நீச்­சல் பயிற்சி மேற்­கொள்­வதை அவர்­க­ளுக்கு நான் பரிந்­து­ரைப்­ப­துண்டு. மேலும், வழக்­க­றி­ஞர்­களாகப் பணி­பு­ரி­யும் என் நண்­பர்­கள், தொடர்ந்து கடு­மை­யாக உழைத்து உடலை வருத்­திக்­கொண்­ட­தைக் கண்­டுள்­ளேன். அவர்­க­ளுள், பக்­க­வா­தம், புற்­று­நோய் முத­லிய நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்டு, இள­மை­யி­லி­ருந்தே மிக வேத­னை­யுற்­றி­ருப்­போ­ரும் உள்­ள­னர். அத்­த­கைய வாழ்க்­கை­முறையை நான் விரும்­ப­வில்லை." என்­றார் திரு இந்­திர ராஜ். தற்­போது பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் உள்ள 74 வய­தான தம் அண்­ண­னைச் சென்று காணு­வ­தற்­கும் தின­மும் நேரம் ஒதுக்கி வரு­கின்­றார் இவர்.

வழக்­க­றி­ஞர் பணி­ தவிர்த்து, சமூ­கத்­திற்கும் தொண்­டூ­ழி­யம் செய்து வரு­கின்­றார் திரு இந்­திர ராஜ். செயிண்ட் லூக்ஸ் மருத்­து­வ­மனை­யின் தொடக்­கத்­தி­லி­ருந்தே கிட்­டத்­தட்ட 25 ஆண்­டு­க­ளுக்கு அதன் உரு­வாக்­கத்­தி­லும் நிர்­வா­கத்­தி­லும் பங்குகொண்­டி­ருந்­தார் திரு இந்­திர ராஜ். மேலும், ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்­பி­லும் உறுப்­பி­ன­ராக இருந்து வந்­துள்­ளார் இவர். இத்­த­கைய தொண்­டூ­ழி­யப் பணி­களே அதிக மன­நிறை­வைத் தரு­வ­தாக இவர் உணர்­கி­றார்.

தம் மனை­வி­யைச் சந்­திக்­கும் முன் தமது வாழ்­வில் முதல் காத­லாக இருந்­தது இசை­தான் என்றார் திரு இந்­திர ராஜ். 1966ஆம் ஆண்­டில் ஆங்­கிலோ சீனப் பள்ளி­யின் இசைக்குழு­வில் 'டிரம்­பெட்' எனும் ஊது­கொம்­பினை இவர் வாசித்து வந்­தார். பாடாங் திட­லில் நடந்­தே­றிய முதல் தேசிய தின அணி­வகுப்­பி­லும் திரு இந்­திர ராஜ் வாசித்­தார். தற்­போது, இவர் வழக்­க­மா­கச் செல்­லும் வெஸ்லி மெத்த­டிஸ்ட் தேவா­ல­யத்­தில் இயங்­கும் வெஸ்லி சோலி டியோ கிளோ­ரியா எனும் இசைக்­கு­ழு­வில் தொடர்ந்து வாசித்து வரு­கின்­றார். கொவிட்-19 சூழ­லில் காற்­றி­சைக் கரு­வி­க­ளைத் தேவா­ல­யத்­தின் பொது நிகழ்­வு­களில் வாசிக்க இய­லா­மல் போனா­லும், தனிப்­பட்ட முறை­யில் தின­மும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து வரு­கின்­றார் இவர்.

"என்னை மிகவும் உற்­சா­க­மாக வைத்­துக்­கொள்­வது இசை­தான். படிப்­பை­யும்­விட எனக்கு இள­மை­யி­லி­ருந்தே இசை­யில் தான் அதிக விருப்­பம் இருந்­தது. இன்­று­வரை ஊது­கொம்பு வாசிப்­பதை விடா­மல் தொடர்­கி­றேன்," என்கிறார் திரு இந்­திர ராஜ்.

இவ்­வ­கை­யில், திரு இந்­திர ராஜ் தமது ஆரோக்­கி­யத்­தை­யும் குடும்ப நல­னை­யும் சமூக நல­னை­யும் பேணு­வ­தில் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றார். தமது அலு­வல்­களை எல்­லாம் தாமே செய்து­கொண்டு, மனஉறு­தி­யு­ட­னும் மகிழ்ச்சி­யு­ட­னும் ஒவ்­வொரு நாளை­யும் எதிர்­நோக்­கும் திரு இந்­திர ராஜ் தம்மைச் சுற்­றி­யுள்­ளோ­ரை­யும் மிக மகிழ்ச்­சி­யாக வைத்­துக்­கொள்­கின்­றார்.

ஒவ்­வொரு நாளை­யும் முழு­மையாக அனு­ப­விப்­ப­தோடு, அதை முடிந்த அள­விற்கு இர­சிக்­க­வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் தமது வாழ்க்கைமுறையை அமைத்­துக் கொண்­டுள்­ளார் திரு இந்­திர ராஜ்.

வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்

உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.

அக்குழு 2017ஆம் ஆண்டில் 'இளமை உணர்வில் நான் எஸ்ஜி' எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.

மேல்விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்கால, எதிர்கால மூத்தோருக்குச் சேவையாற்றவும் மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டுச் சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.

பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மனநலத்தைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.

பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.

கடைசியாக, இணைப்பு எனும் கூறு, 'கம்பத்து உணர்வு' போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளம் தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கும் ஆதரவளிக்கும்.