பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட மறு மதிப்பீடு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எடியூரப்பா மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து லோக் ஆயுக்தா காவல் பிரிவு விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

