வாள்வீச்சில் புதிய வரலாறு

வாள்வீச்சில் புதிய வரலாறு

1 mins read

வாள்­வீச்சு 'எபே' பிரி­வில் எல்லி கோ, கிரியா திகானா அப்­துல் ரகு­மான், ரெபெக்கா ஓங், விக்­டோ­ரியா லிம் ஆகி­யோர் அடங்­கிய சிங்­கப்­பூர் மக­ளிர் குழு தங்­கப் பதக்­கம் வென்று புதிய வர­லாறு படைத்­தது. இறு­திப் போட்­டி­யில் சிங்­கப்­பூர் மக­ளிர் 45-36 என்ற புள்­ளிக் கணக்­கில் தாய்­லாந்து மகளிரை மண்­கவ்­வச் செய்­த­னர்.

வாள்­வீச்­சில் சிங்­கப்­பூ­ருக்­குக் கிட்­டிய மூன்­றா­வது தங்­கம் இது.

கடந்த முறை இறு­திப் போட்­டி­யில் பிலிப்­பீன்­சி­டம் கிட்­டிய தோல்­விக்­கும் சிங்­கப்­பூர் மக­ளிர் பழி­தீர்த்­துக்­கொண்­ட­னர். இம்­முறை புதிய அணி­யைக் கள­மி­றக்­கிய பிலிப்­பீன்ஸ் குழு, சிங்­கப்­பூர்க் குழு­வி­டம் 32-45 எனத் தோற்றது.

இத­னி­டையே, சான் ஃபு சியன், சோய் யு யோங், டான் வெய் ஸுவா, ஜோரெல் சீ ஆகி­யோர் அடங்­கிய சிங்­கப்­பூர் ஆட­வர் குழு 'சேபர்' பிரி­வு அரையிறுதியில் வியட்­னா­மி­டம் 35-45 என்ற புள்ளிக் கணக்­கில் தோற்றதால் வெண்­கலமே கிடைத்­தது.