வண்ணமிகு இரு மாண்டரின் மீன்கள் (படம்)
முதன்முறையாக சிங்கப்பூரில் காணப்பட்டன. இந்த வகை மீன்களை சிங்கப்பூரில் பார்ப்பது இதுவே முதல் முறை. ஆனால் இவற்றைப் பெரும்பாலும் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியாவின் போர்னியோ, ஜாவா தீவுகளில் காணலாம். இந்த மீன்கள் மீன் காட்சியகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு
இருக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மீன் அறிவியலாளர்கள் கூறினார்கள். செந்தோசாவில் கடலுக்கு அடியில் நீந்திக்கொண்டு இருந்தபோது இந்த வண்ணமிகு மீன்களைத் தான் பார்த்ததாக மருத்துவமனைப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் வீனஸ் டான் கூறினார். கடற்கரைக்குச் சென்றால் நீங்களும் இதுபோன்ற அதிசயங்களைக் காணலாம். உடனே அவற்றைத் தொந்தரவு செய்யாமல் படம் எடுத்து வாருங்கள்.
கண்ணைக் கவரும் நீலம், ஆரஞ்சு வண்ணங்களில் விசிறி போன்று துடுப்புகளை விரித்து மாண்டரின் மீன்கள் நீந்திக்கொண்டு இருக்கின்றன.

