இதுவரை பல அற்புதமான நிகழ்ச்சிகளை மக்களிடம் சேர்த்துள்ள சங்கர் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தற்போது கொவிட்-19க்குப் பிறகு, மற்றொரு சுவாரசியமான நிகழ்ச்சியைப் படைக்க உள்ளது.
'இனி எல்லாம் சுகமே!' என்ற தலைப்பில் வாழ்க்கை மேம்பாட்டுப் பேருரை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் வழங்க இருக்கிறது நிறுவனம்.
ஆன்மீக அறிவுக்கடல் என மக்கள் போற்றும் ஸ்ரீஆசான்ஜி வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) மாலை 6.30 மணிக்கு ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள பிஜிபி அரங்கத்தில் பேருரை வழங்க உள்ளார். வருங்கால வாழ்க்கையை மேம்படுத்த இப்பேருரை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்வில் நல்ல மாற்றங்கள் நேர, மாற்றம் நம்மிடம் இருந்து ஆரம்பம் ஆக வேண்டும். புத்தாண்டுத் தொடக்கத்தில், ஒருவர் தமக்கு அளித்துக் கொள்ளும் முதல் பரிசு வாழ்க்கை மேம்பாடாக இருக்க வேண்டும். இந்த அம்சம்தான் ஆண்டுதோறும் வாழ்க்கையைச் சுமுகமாக தொடர உதவும்.
வாழ்க்கை மேம்பட, ஒருவரின் ஆளுமை மேம்பட வேண்டும். அந்த ஆளுமை மேம்பாட்டின் உத்திகளை அறிந்துகொள்ள வெள்ளிக்கிழமை நடக்கும் பேருரை நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.
நமது ஆளுமையை மேம்படுத்துவதன் மூலம், நம் லட்சியங்களை நோக்கி நாம் வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கலாம். வாழ்வின் இன்பங்களைப் பெருக்கவும் துன்பங்களைக் குறைக்கவும் ஆளுமை மேம்பாடு வழி வகுக்கும். இளையர் முதல் பெரியோர் வரை அனைவரும் கேட்டுப் பயனடையக்கூடிய இந்நிகழ்ச்சியை ஆதரவாளர்கள் இலவசமாக அளிக்க முன்வந்துள்ளனர். இலவச நுழைவுச்சீட்டுகளைப் பெற 83532026 எண்ணை அழையுங்கள்.
நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்களுக்கும் இந்த எண்ணை தொடர்புகொள்ளவும்.
விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' கலைஞர்கள் படைத்த 'சிரிக்கப்போகுது சிங்கப்பூர்', சன் டிவியின் பட்டிமன்ற நிகழ்ச்சி போன்ற சிங்கப்பூர் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாளர்களாக இருந்துள்ளது சங்கர் ஹோல்டிங்ஸ் நிறுவனம்.
மக்கள் தற்போது கண்டுகளித்து வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் உள்ளூர் விநியோக ஆதரவாளராகவும் இருக்கும் இந்நிறுவனம், உள்ளூரில் விரும்பிப் பார்க்கப்படும் வசந்தம் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விரைவில் விளம்பரதாரராகச் செயல்பட உள்ளது. தொடர்ந்து, நிறுவனத்திடம் இருந்து பல கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

