தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய சேவை வீரர்களை ஆதரிக்கும் 'ராயல் கிங்ஸ்'

2 mins read
4c027dc3-9a8b-435d-952f-e58d7765c476
-

உடற்­ப­யிற்சிக் கூடங்­கள், மன்­றங்­களில் (கிளப்ஸ்) உறுப்­பி­ன­ராக சேர இல­வச அனு­மதி, நிறு­வ­னத்­தால் கொடுக்­கப்­படும் ஆரோக்­கி­ய­மான மதிய உணவு, நீடிக்­கப்­பட்ட விடு­மு­றை­கள் போன்ற நன்­மை­களை அனு­ப­விக்க ஒரு­வர் நிறு­வ­னத்­தின் மூத்த நிர்­வா­கி­யாக அல்­லது நிர்­வாகக் குழுவை சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்­டும்.

ஆனால், ராயல் கிங்ஸ் குரூப்ஸ் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தில் உள்ள தேசிய சேவை புரி­யும் ஊழி­யர்­கள் இதே நன்­மை­களை அனுப­விக்­க­லாம். எந்தப் பத­வி

­யில் இருப்­ப­வர்­களும் இந்தச் சலு­கை­களைப் பெற­லாம்.

தேசிய சேவைக்கு அது வழங்­கும் ஆத­ரவு தனது நிறு­வ­னத்­தின் முக்­கிய கொள்­கை­யாக உள்­ளது என்று ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு சிராஜ்தீன் செய்யது முஹம்மது, 44, கூறி­னார்.

ராயல் கிங்ஸ் நிறு­வ­னம் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு மேலாண்மை, தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­சனை சேவை­களை வழங்­கு­கிறது. தேசிய சேவை புரி­ப­வர்­க­ளுக்கு பல­வித சலு­கை­களை அளித்து ஆத­ரிக்­கும் இந்த நிறு­வ­னத்­திற்கு 'என்­எஸ் மார்க்' (கோல்ட்) அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டது. இந்த அங்­கீ­கா­ரம் தேசிய அள­வில் கொடுக்­கப்­படும் ஒரு விருது.

தேசிய சேவையை ஆத­ரித்து முழுமைத் தற்­காப்பைப் பரிந்­து­ரைக்­கும் முறை­யில் செயல்­படும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் இவ்விருது வழங்­கப்­படும்.

வணிக நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் கொள்­கை­கள், நடை­

மு­றை­கள், பணி­யி­டத்­தில் தேசிய சேவைக்­கான தங்­கள் ஆத­ர­வைக் காட்­டும் முயற்­சி­கள் பற்­றிய விவ­ரங்­களை தற்­காப்பு அமைச்­சி­டம் சமர்ப்­பிக்­க­லாம்.

மதிப்­பாய்­வுக்­குப் பிறகு நிறு­வ­னத்­தின் முயற்­சி­கள் போது­மா­ன­தா­கக் கரு­தப்­பட்­டால் இந்த அங்­கீ­கா­ரம் வழங்­கப்­படும். இந்த அங்­கீ­கா­ரத்­தில் இரண்டு வகைகள் உள்­ளன. 'என்­எஸ் மார்க்' விருது அதில் ஒன்று.

'என்­எஸ் மார்க்' (கோல்ட்) அங்­கீ­கா­ரம் என்ற மற்­றொரு விருது, தேசிய சேவையை ஆத­ரிக்­கும் வகை­யில் எதி­ரி­பார்ப்­புக்கும் அதிகமாகச் செயல்­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

'என்­எஸ் மார்க் (கோல்ட்)' அங்­கீ­கா­ரத்தைப் பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு மின்சான்றிதழ்கள் வழங்­கப்­படும். மேலும், உள்­துறை அமைச்சு, தற்­காப்பு அமைச்சு சேர்ந்து நடத்­தும் தொழில் கண்­காட்­சி­க­ளுக்கு இந்­நி­று­வ­னங்­கள் அழைக்­கப்­படும்.

இதில், தேசிய சேவை சார்ந்த கொள்­கை­களையும் நடை­மு­றை­

க­ளை­யும் ஆத­ரிக்­கும் நிறு­வ­னங்­களில் முன்­மா­தி­ரி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னம் தற்­காப்பு, உள்­துறை அமைச்­சுக்­க­ளால் குறிப்­பி­டப்­படும். மேலும், என்­எஸ் மார்க் (கோல்ட்) அங்­கீ­கா­ரத்தைப் பெற்ற நிறு­வ­னங்­கள் முழுமைத் தற்­காப்பு தொடர்­பான விருதை­ யும் பெற வாய்ப்பு உண்டு.

இவ்­வி­ருது நாட்­டின் தற்­காப்பை வலுப்­ப­டுத்த உத­வும் முன்மாதிரி யான தனி நபர்களுக்கும் நிறு­

வ­னங்­க­ளுக்­கும் வழங்­கப்­படும் மிக உயர்ந்த தேசிய விருது.

தற்­காப்பு அமைச்­சர் உப­ச­ரிப்­பில், மூத்த அமைச்­சர்­கள் கலந்து கொண்ட இரவு விருந்­தின்போது இந்த மதிப்­பு­மிக்க விருது நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

இத­னால், ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறு­வ­னம் தேசிய சேவைக்கு ஆற்­றிய ஆத­ர­வை­யும் அங்­கீ­கார­த்தையும் கருத்­தில் கொண்டு 'என்­எஸ் மார்க்ஸ்' விரு­துக்கு நிறு­வ­னம் தன் பெயரை சமர்ப்­பித்­தது என்று திரு சிராஜ்தீன் கூறி­னார்.