தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய சேவை புரிந்தோரை தேடிவந்து தொற்றிக்கொள்ளும் நற்பண்புகள்

3 mins read

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் பணி­யாற்­றிய முன்­னாள் தேசிய சேவை வீர­ரான திரு சிராஜ்தீன், அவ­ரது தேசிய சேவை பணி முடிந்து 22 ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும் அந்த அனு­ப­வத்­தி­லி­ருந்து கற்­றுக்­கொண்­டதை அவர் இன்­னும் நினை­வில் வைத்­துள்­ளார். அவ­ரது தனிப்­பட்ட அனு­ப­வத்­தில், வேலைக்குத் தகுந்த இரு­வ­ருக்கு இடை­யில் தேசிய சேவையாற்றச் சென்ற ஒரு­வ­ருக்­கும் அவ்வாறு செய்யாத ஒரு­வ­ருக்­கும் இடையில் வேறு­பாடு உள்­ளது.

தின­மும் பல­ரின் வாழ்க்கை தமது கையில் இருக்­கும் நிலை­யில், அதி­முக்­கிய சிந்­தனை ஆற்­றல், பிரச்­சி­னை­களை தீர்க்­கும் ஆற்­றல், தலை­மைத்­து­வம் போன்ற திறன்­கள் தேசிய சேவையை புரிந்த ஒரு­வ­ருக்­குள் பதிந்­து­வி­டும்.

இத்­த­கைய திறன்­களை முத

­லா­ளி­கள் அங்­கீ­க­ரித்­தால், அவை பணியி­டத்­தில் பய­ன­ளிக்­கும் என்­ப­தை­யும் கூறி­னார் முன்­னாள் தேசிய சேவை வீரர்.

ராயல் கிங்ஸ் குரூப்ஸ் நிறு­வ­னம்­ தே­சி­ய­ சே­வை புரிந்­த­வர்களின் சான்­றிதழ்க­ளை­யும் அவர்களின் உயர் அதி­கா­ரி­க­ளின் வாக்­கு­மூ­லங்­க­ளை­யும் பணி­ய­மர்­தல் செயல்­மு­றை­யின் போது கருத்­தில் கொள்­ளப்­படும். வேலை நேர்­முகத் தேர்­வின்போது அவர்­க­ளின் தேசிய சேவை அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­

கி­றார்­கள்.

முழு­நேர தேசிய சேவை­யில் செல­வ­ழித்த நேரம், நிறு­வ­னத்­தில் வேலை செய்­த­தாக கணக்­கி­டப்­ப­டு­கிறது. எனவே ராயல் கிங்ஸ் நிறு­வ­னத்­தில் வேலை செய்­யும் ஒவ்­வொரு புதிய தேசிய சேவை வீர­ரும் குறைந்­தது இரண்டு ஆண்­டு­கள் அந்­நி­று­வ­னத்­தில் வேலை செய்­த­தாக கரு­தப்­படும்.

திரு சிரா­ஜ்தீனைப் பொறுத்­த­வரை, தேசிய சேவை ஆற்­று­வது இந்த நிறு­வ­னத்­திற்கு அவர்­கள் ஆற்­றும் ஒரு பங்கு.

"சிங்­கப்­பூர் மிக­வும் துடிப்­பான, வெற்­றி­க­ர­மான நிதி­நி­லைக்­கு­ரிய மைய­மாக உள்­ளது. அதற்­குக் கார­ணம், சிங்­கப்­பூர் பாது­காப்­பான நாடாக கரு­தப்­ப­டு­கிறது" என்று திரு சிரா­ஜ்­தீன் கூறு­கி­றார்.

"சிங்­கப்­பூர் வணி­கத்­திற்கு உகந்த சூழல் கொண்­டது. இத­னால், மக்­கள் தங்­கள் முத­லீ­டு­கள் பாது­காப்­பாக இருப்­ப­தாக உணர்­கி­றார்­கள். தேசிய சேவை வீரர்­கள் நம் நாட்­டின் பாது­காப்­புக்­கும் தற்­காப்­புக்­கும்­ பெரி­ய­ பங்கை அளித்திருக்­கின்­ற­னர். அவர்­க­ளின் பங்கை ஆற்­றி­ய­தோடு தொடர்ந்து சேவை செய்­வார்­கள்.

"எனவே அவர்­க­ளின் பங்­க­ளிப்­பு­களை மிக உயர்ந்த முறை­யில் நாம் அங்­கீ­க­ரிப்­ப­து­டன், அவர்­க­ளின் தேசிய சேவை கட­மை­களை மதித்து அவர்­களை ஊக்­கு­விப்­ப­தும் சரி­யா­னது" என்­றும் திரு சிரா­ஜ்தீன் குறிப்­பிட்­டார். ஒரு முன்­னாள் முத­லா­ளி

­யி­டம் இந்த மனப்­போக்கை அவர் கற்­றுக்­கொண்­டார். அந்த முதலாளி, திரு சிரா­ஜ்தீன் உட்­பட மற்ற தேசிய சேவை வீரர்­க­ளை அணுகி தமது ஆதரவை வழங்கினார்.

இதைப் பார்த்து ஊக்கமடைந்த அவர், தனது சொந்­தத் தொழி­லைத் தொடங்­கி­ய­வு­டன் அதைப்போல செய்ய வேண்­டும் என்று உறு­தி­ய­ளித்­தார் திரு சிரா­ஜ்தீன். இத­னால், செயல்­பாட்­டுக்குத் தயாராக உள்ள ஊழி­யர்­க­ளின் நல­னில்­ எந்­தச் செல­வும் மிச்­சப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஒவ்­வோர் ஊழி­ய­ரும் சாஃப்ரா, ஹோம் டீம் அல்­லது சிவில் சர்­வீஸ் சங்­கத்­தில் உறுப்­பி­னர்­க­ளாக இல­வ­ச­மாக சேரமுடி­யும். நிறு­வ­னத்­தின் செல­வில், ஊழியர்­க­ளால் அவர்­க­ளின் குடும்­பங்­களோடு இந்த இடங்­களில் நேரம் செல­வ­ழிக்­க­ மு­டி­கிறது.

தனி­ந­பர் உட­லு­று­திச் சோத­னை­யில் நன்­றாகத் தேர்ச்சி பெறு­வோ­ருக்கு $500 வரை என்­டி­யுசி பற்றுச்­ சீட்­டுகள் வழங்­கப்­படுகிறது. கடந்த ஜூலை மாதம் ராயல் கிங்ஸ் குரூப் அதன் 10வது ஆண்டு விழா­வுக்­காக, நிறு­வ­னத்­தில் வேலை செய்­த ஒவ்­வொரு தேசிய சேவை வீர­ருக்கும் தலா $100 பற்­று­ச்சீட்­டு­களை வழங்­கி­யது.