வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்கள் எளிதில் வாக்களிக்கலாம்

வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்கள் எளிதில் வாக்களிக்கலாம்

2 mins read

வெளி­நா­டு­களில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­வ­ரும் அதி­பர் தேர்­த­லுக்­காக அஞ்­சல்­வழி வாக்­க­ளிக்­கக்­கூ­டும். நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட புதிய மசோதா ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் இது சாத்­தி­ய­மா­கும்.

இதன்­படி, வெளி­நா­டு­களில் குறிப்­பிட்ட சில நகர்­களில் அமைக்­கப்­பட்ட வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வாக்­கா­ளர்­கள் நேர­டி­யா­கச் செல்­லத் தேவை­யில்லை. 2020 பொதுத் தேர்­த­லின்­போது பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளுக்­கி­டையே வெளி­நாட்டு வாக்­கா­ளர்­கள் சிலர் வாக்­க­ளிக்­க­வில்லை.

புதிய சட்ட மசோதா வெளி­நாட்­டு­வாழ் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மேலும் வச­தி­யாக இருக்­கும் என்று தேர்­தல் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­வழி தெரி­வித்­தது.

தேர்­த­லுக்கு முன் வாக்­கா­ளர் பதி­வேடு திருத்தி அமைக்­கப்­ப­டு­வது வழக்­கம்.

இந்­நி­லை­யில் தேர்­தல் பதி­வ­கத்­தில் ஏற்­கெ­னவே இடம்­பெற்­றுள்ள சிங்­கப்­பூ­ரர்­கள், வெளி­நாட்டு வாக்­கா­ளர்­கள் என மீண்­டும் தங்­கள் விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­யத் தேவை இருக்­காது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­நா­டு­களில் ஏறத்­தாழ 200,000 சிங்­கப்­பூ­ரர்­கள் வசிக்­கி­றார்­கள்.

2020 பொதுத் தேர்­த­லின்­போது பதி­வான 6,570 வெளி­நாட்டு வாக்­கா­ளர்­களில் 4,794 பேர் வாக்­க­ளித்­த­னர்.

சட்­டத்­தி­ருத்த மசோ­தாவை பொதுச் சேவைக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார்.

அமைச்­சு­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்­டுக் குழு விவா­தங்­க­ளுக்­குப் பிறகு மார்ச் மாதத்­தில் இதன் இரண்­டா­வது வாசிப்பு நிக­ழும் என்­றார்.

வாக்­க­ளிப்பு ஏற்­பா­டு­களை மேம்­ப­டுத்­து­தல், தேர்­தல் விளம்­ப­ரச் சட்­டங்­களை மாற்­று­தல், தேர்­தல் செயல்­மு­றை­களை வலு­வாக்­கு­தல் ஆகி­யவை தொடர்­பில் முக்­கி­யச் சட்­டத்­தி­ருத்­தங்­கள் முன்­வைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

புதிய திருத்­தச்­சட்­டங்­க­ளின்­கீழ் தாதிமை இல்­லங்­களில் வாக்­க­ளிப்பு நிலை­யங்­கள், நட­மா­டும் வாக்­க­ளிப்­புக் குழுக்­கள் போன்ற சிறப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­படும்.

அத்­து­டன் தேர்­தல் நட­வ­டிக்­கை­களில் 16 வய­துக்­கும் குறைந்­தோர் பங்­கேற்­ப­தற்­குத் தடை விதிக்­கப்­படும். சிறார்­கள் தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை இது தவிர்க்க உத­வும் என்று கூறப்­பட்­டது.

தேர்­தல் தொடர்­பான விளம்­ப­ரம் செய்­வ­தி­லும் மாற்­றங்­கள் இருக்­கும்.