இந்தியாவின் '5ஜி' மீது 10 நாடுகள் ஆர்வம்

இந்தியாவின் '5ஜி' மீது 10 நாடுகள் ஆர்வம்

2 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வின் '5ஜி' தொழில்­நுட்­பம் மீது 10 நாடு களுக்கு ஆா்வம் இருப்­ப­தாக மத்­திய அமைச்சா் அஸ்­வினி வைஷ்­ணவ் கூறி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் உரு­வாக்­கப்­பட்ட '4ஜி', '5ஜி' தொழில்­நுட்­பங்­களை ஒன்­பது முதல் 10 நாடு­கள் முயற்­சித்­துத் பார்க்க விரும்புவதாக மத்­திய தொலைத் தொடர்­புத் துறை அமைச்­ச­ரு­மான அஸ்­வினி வைஷ்­ணவ் தெரி­வித்து உள்­ளார்.

டெல்­லி­யில் 'தி எக்க­னா­மிக் டைம்ஸ்' நாளி­தழ் சாா்பில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலக வணிக மாநாட்­டில் பேசிய அவர் இந்த விவ­ரங்­களை வெளியிட்­டார்.

கடந்த ஆண்டு அக்­டோபா் 1ஆம் தேதி இந்­தி­யா­வில் '5ஜி' சேவை­கள் அறி­மு­க­மா­யின. '5ஜி' சேவை அறி­மு­கம் செய்­யப்­பட்­ட 100 நாள்­க­ளுக்­குள் நாட்­டின் 200க்கும் மேற்­பட்ட நக­ரங்­களில் அச்­சேவை தொடங்­கப்­பட்­டது.

இதன் வேகத்தை உலக அள­வில் தொழில்­துறை தலை­வர்­கள் பாராட்­டி­யுள்­ளனா்.

உல­கில் வேறு இடங்­க­ளை­விட இந்­தி­யா­வில் மிக வேக­மாக 5ஜி சேவை­கள் பயன்­பாட்­டுக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தாக பல அனைத்­து­லக அமைப்­பு­கள் தெரி­வித்­துள்­ளன.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் உல­கின் முக்­கிய தொலைத் தொடர்பு தொழில்­நுட்ப ஏற்று மதி­யா­ள­ராக இந்­தியா உரு­வா­கும். தற்­போது உள்­நாட்­டில் உரு வாக்­கப்­பட்­டுட்ள்ள '4ஜி', '5ஜி' தொழில்­நுட்­பங்­கள் தயா­ராக உள்­ளன.

தொடக்­கத்­தில் ஒரே நேரத்­தில் ஒரு லட்­சம் அழைப்­பு­கள் மூலம் அந்­தத் தொழில்­நுட்­பங்­கள் பரிசோதிக்­கப்­பட்­டன. பின்னா் 50 லட்­சம், ஒரு கோடி அழைப்­பு­கள் மூலம் பரி­சோ­தனை மேற்கொள்­ளப்­பட்­டது.

பரிசோதனைகள் அற்புதமாக வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்தியாவின் '4ஜி', '5ஜி' தொழில்நுட்பங்களை ஒன்பது முதல் 10 நாடுகள் முயற்சித்துப் பார்க்க விரும்புகின்றன என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.