புதுடெல்லி: இந்தியாவில் பெருந்தொற்றுக்கு மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 116ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 917ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 107 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 258 பேர் குணமடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 32 அதிகரித்துள்ளது.
அதாவது தற்போது 1,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் கடந்த 2 நாள்களாக உயிரிழப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசத்தில் மூவர் மாண்டனர். இதையடுத்து உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 5,30,760ஆக அதிகரித்துள்ளது.

