தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கிய சிபிஐ

2 mins read

புது­டில்லி: புது­டில்­லி­யில் மது­பா­னக் கொள்­கை­யில் நடந்த முறை­கேடு தொடர்­பான வழக்­கில் நேற்று விசா­ர­ணைக்கு முன்­னி­லையாக வேண்­டும் என்று அம்­மா­நில துணை முதல்­வ­ரும் ஆம் ஆத்­மி­யின் மூத்த தலை­வ­ருமான மணீஷ் சிசோ­டி­யா­வுக்கு சிபிஐ இரண்­டா­வது முறை அழைப்­பாணை அனுப்­பி­யி­ருந்­தது.

ஆனால் டெல்­லிக்கு தற்­போது முக்­கிய தரு­ணம் என்­ப­தால் வரவு செல­வுத் திட்­டத்­தைத் தயா­ரித்து இம்­மாத இறு­திக்­குள் மத்­திய அர­சுக்கு அனுப்ப வேண்­டும். எனவே நீதி­மன்­றத்­தில் முன்­னிலை­யா­கும் தேதியை மாற்றி வைக்­கும்­படி சிபி­ஐ­யி­டம் மணீஷ் சிசோ­டி­யா­வுக்கு கோரிக்கை விடுத்­திருந்­தார். இதனை ஏற்­றுக்கொண்ட சிபிஐ, புதிய தேதி­யு­டன் அழைப்­பாணை அனுப்­பு­வ­தா­கக் கூறி­யுள்­ளது. டெல்­லி­யில் மது­பானக் கடை­க­ளுக்கு உரி­மம் வழங்­கி­ய­தில் முறை­கேடு நடந்­த­தாக பதிவு செய்­யப்­பட்ட வழக்­குத் தொடர்­பில் துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா வீடு உட்­பட 21 இடங்­களில் சிபிஐ அதி­கா­ரி­கள் அதி­ர­டி­யாக சோதனை நடத்­தி­னர். அதை­ய­டுத்து மணீஷ் சிசோ­டியா மற்­றும் 14 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதி­மன்­றத்­தில் சிபிஐ வழக்­குப் பதிவு செய்­தது.

இந்­தக் குற்­றச்­சாட்டை ஆம் ஆத்மி கடு­மை­யாக மறுத்­தது. ஆம் ஆத்­மியை உடைக்க தன்­னு­டன் பாஜக பேரம் பேசி­ய­தாக மணீஷ் சிசோ­டியா பொது­வெ­ளி­யில் கூறி­ய­தைத் தொடர்ந்து, தன் மீது வீண் குற்­றச்­சாட்­டு­கள் வைக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­ வ­ரு­கி­றார். இந்த வழக்­கில் ஆந்­திரா ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த எம்பி மகுண்டா சீனி­வாச ரெட்­டி ­யின் மகன் ராகவ்­வை­யும் அம­லாக்­கத்­துறை கைது செய்­துள்­ளது. அதே­போல் தெலுங்­கானா முதல்­வ­ரின் மகள் கவி­தாவிடம் சிபிஐ விசா­ரணை செய்­தது.