புதுடெல்லி: சிட்னியில் ஆஸ்திரேலியப் பிரதமா் ஆன்டனி அல்பனிசும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அனைத்துலக சூழல் சவால்மிகுந்ததாக உள்ள நிலையில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கா் அப்போது வலியுறுத்தினார்.
ஃபிஜி பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணமாக அமைச்சர் ஜெய்சங்கா் சிட்னி சென்றுள்ளார். அங்கு அந்நாட்டுப் பிரதமா் ஆன்டனி அல்பனிசை சனிக் கிழமை சந்தித்துப் பேசினார்.
இருவரும் இருதரப்பு நல்லுறவு, பொருளியல் வாய்ப்புகள், மக்களுக்கு இடையிலான தொடர்பு, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கா் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பிரதமா் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை பிரதமா் அல்பனிசிடம் பகிர்ந்துகொண்டேன். இரு தரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்து வது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

