லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா
மாநிலத்தை நேற்று முன்தினம் மேலும் ஒரு புயல் தாக்கியது.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
புயல் காரணமாக அணைக்கரை ஒன்று இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் பல சேதங்களை ஏற்
படுத்தியதுடன் குறைந்தது இரு
வரின் உயிரைப் பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
"எது நடக்கக்கூடாது என்று அஞ்சினோமோ அது நடந்துவிட்டது. பஜரோ ஆற்றில் நீரின் அளவு ஆற்றின் கொள்ளளவையும் கடந்து வெள்ளம் கரைபுரண்டோடியது," என்று மொன்ட்டேரே கவுன்ட்டியின் மேற்பார்வையாளர் திரு லுயிஸ் அலேஜோ கூறினார்.
வெள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கியதில் அவற்றில் மாட்டிக்கொண்டு தவித்தோரை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியதைக் காட்டும் படங்கள் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது ஒரு சாலை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியது.
கலிஃபோர்னியாவில் உள்ள பல நகரங்களில், குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ள நகரங்களில் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அங்குள்ள மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் இம்முறை வழக்கத்துக்கு மாறாக புயல் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் தொடர்ந்து பல வாரங்களாக அம்மாநிலத்தை உலுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் அவசரநிலையை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒப்பதல் அளித்தார்.
இதன்மூலம் அம்மாநிலத்துக்குத் தேவையான உதவி விரைவாகச் சென்றடையும்.
இதற்கிடையே, தென்னமெரிக்க நாடான பெருவை சுழற்காற்று புரட்டி எடுத்துள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாகவும் அந்நாட்டு மக்களுக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
பெருவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

