மாணவப் படைப்பாற்றல், புத்தாக்கத்தை வெளிக்கொணரும் 'இணைய மேடை'

மாணவப் படைப்பாற்றல், புத்தாக்கத்தை வெளிக்கொணரும் 'இணைய மேடை'

2 mins read

ஆ. விஷ்ணு வர்­தினி

எழுத்­தா­ளர்­க­ளாக, கவி­ஞர்­க­ளாக பரி­மா­ணம் காண மாண­வர்

களுக்­குத் தளம் அமைத்­துக் கொடுக்கிறது 'இணைய மேடை' எனும் வலைப்பதிவு. சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமி­ழி­யல் மாண­வர்­க­ளது ஆங்­கில, தமிழ் எழுத்­துப் படைப்­பு­களை இத்­த­ளம் ஒருங்­கி­ணைத்­துள்­ளது.

இவர்­க­ளின் சிறு­க­தை­கள், கவி­தை­கள், கட்­டு­ரை­கள் ஆகி­யவை தளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இத்­த­ளத்­தில் காணப்­படும் மூன்று சொல் சிறு­க­தை­கள், கடி­தங்­கள், திரைப்­பட விமர்­ச­னங்­கள் ஆகி­யவை மாண­வர்­க­ளின் புத்­தாக்க, பன்­மு­கத்­தன்­மை­கொண்ட முயற்­சி­க­ளைப் பறை­சாற்­று­கின்­றன. தமிழ்ப் பண்­பாட்­டில் பெண்­ணி­யத்­தின் பங்கு என்ன, தமி­ழர்­க­ளின் அடை­யா­ளத்தை இலக்­கி­யம் எவ்­வ­கை­யில் பறைசாற்றுகிறது என்­பது குறித்து தங்­க­ளது ஆய்­வு­முறை கருத்து

களை­யும் மாண­வர்­கள் முன்­வைத்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வழங்­கப்­பட்டு வரும் தெற்­கா­சிய ஆய்­வு­க­ளின் ஒரு பிரி­வான தமி­ழி­ய­லில் இரண்டு பாடத் தொகுப்­பு­கள் இடம்­பெ­று­கின்­றன. 'தமிழ்க் கலா­சா­ர­மும் சமு­தா­ய­மும்', 'நவீன தமிழ் இலக்­கி­யம்' ஆகிய இரு பாடத்­ தொகுப்பு­களும் பல­த­ரப்­பட்ட தமி­ழி­யல் கூறு­களை அலசி ஆராய மாண­வர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கின்­றன. சமூ­க­வி­யல், மானு­ட­வி­யல், வர­லாறு முத­லிய பல்­வேறு துறை­களை இப்­பா­டம் உள்­ள­டக்­கி­யுள்­ளது. மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் மாண­வர்­க­ளின் சிறப்­பான படைப்­பு­க­ளைக் காட்­சிப் ­ப­டுத்­தும் வண்­ணம் இந்த வலைப் பதிவு தொடங்­கப்­பட்­டது.

"மாண­வர்­க­ளின் படைப்­பாற்­றலை, புத்­தாக்கச் சிந்­த­னையை வெளிக்­கொ­ண­ர­வும் தமி­ழர் எனும் அடை­யா­ளத்தை வலுப்­

ப­டுத்­த­வும் பயன்­படும் தள­மாக விளங்­க­ வேண்­டும் என்ற லட்சியத்துடன் உருவானது இந்த இணைய மேடை," என்­றார் தெற்­கா­சிய ஆய்வுத் திட்ட விரி­வு­ரை­யா­ள­ரும் தமி­ழி­யல் பிரிவு தலை­வ­ரு­மான டாக்­டர் தாரிணி

அழ­கி­ரி­சாமி.

மாண­வர்­க­ளின் சிந்­தனை மணி­கள் கூடு­தல் தமிழ் மக்­களை சென்­ற­டை­வ­தை­யும் தமி­ழின்­பால் மாண­வர்­க­ளின் ஆர்­வம் தொடர்ந்து பெரு­கு­வ­தை­யும் எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­க­வும் டாக்­டர் தாரிணி கூறி­னார். காலப்­போக்­கில் சிங்­கப்­பூ­ரைத் தாண்டி இளை­யர்­களை இணைக்­கும் ஒரு கருத்­துப் பரி­மாற்ற தள­மா­க­வும் வளக் களஞ்­சி­ய­மா­க­வும் இது திக­ழும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். வலைப்பதிவு முக­வரி: https://nustamilstudies.wixsite.com/inaiya