ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள் எதிர்நோக்க கூடியவை

ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள் எதிர்நோக்க கூடியவை

1 mins read

கல்வி அமைச்சு பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கை கல்வியை விரிவுபடுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் உயர்நிலை மூன்று மாணவர்களுக்கான 'கல்வி அமைச்சு-ஓபிஎஸ் சேலஞ்ச் திட்ட' முகாம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026ஆம் ஆண்டு முதல் எல்லா உயர்நிலை மூன்று மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்பர்.

புலாவ் உபினில் இயங்கி வரும் ஓபிஎஸ் வளாகத்தை தவிர்த்து, 2024ஆம் ஆண்டுக்குள் தயாராக இருக்கிறது கோனி தீவில் அமைந்துள்ள மற்றுமொரு ஓபிஎஸ் வளாகம். கல்வி அமைச்சும் கலாசார, இளையர்துறை அமைச்சும் இணைந்து இவ்வளாகத்தை எழுப்ப உள்ளன.

மெடிசேவுடன் கூடிய மானியம் பெற்ற வெளிநோயாளி திட்டத்தின்கீழ் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் கூடுதல் 2 விழுக்காடு அவர்களின் மெடிசேவ் கணக்கில் சேர்க்கப்படும். மருத்துவ செலவுகளுக்காக ஆண்டுதோறும் $500 வரையிலான கழிவுகளையும் அவர்கள் எதிர்பார்க்கலாம்.

வெளிப்புற நடவடிக்கை துறை குறித்து பலரும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம்; இத்துறையில் இருக்கும் பணி வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களைக் கொண்டிருக்கலாம். ஆர்வமுள்ளோர் மே மாதம் நிகழவிருக்கும் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர் தேர்வை எதிர்நோக்கலாம்.