கொவிட்-19க்குப் பிந்திய காலம்: பொது சுகாதாரத்துக்கு சிங்கப்பூரர்கள் கைகோர்க்க இதுவே சமயம்

கொவிட்-19க்குப் பிந்திய காலம்: பொது சுகாதாரத்துக்கு சிங்கப்பூரர்கள் கைகோர்க்க இதுவே சமயம்

4 mins read

தூய்மை, சுகா­தா­ரம் குறித்த விழிப்­பு­ணர்வை கொவிட்-19 நோய்த்­தொற்று சூழல் அதி­க­ரித்­துள்­ளது. எடுத்­துக்­காட்­டாக, மக்­கள் வெளி­யில் உண்ண செல்­கை­யில் தங்­க­ளது மேசை­க­ளைச் சுய­மாக சுத்­தம் செய்­வ­தற்கு ஆண்­டி­செப்­டிக் மெல்லிழைத்தாட்­களைக் கொண்­டி­ருந்­த­னர். பொதுப் போக்­கு­வ­ரத்­தி­லும் கழி­வறை­க­ளி­லும் உள்ள சுகா­தார நிலை பற்றி கவ­ன­மாக உள்­ள­னர். கிரு­மி­கள் பர­வு­வது பற்­றிய மக்­க­ளின் விழிப்­பு­ணர்வை நோய்த்­தொற்று காலம் கூட்­டி­யுள்­ள­தாக தெரி­வித்த திரு பே, பொது இடங்­க­ளைப் பரா­ம­ரிப்­பது குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­ப­தற்கு இது உகந்த நேரம் என்­றார்.

மாதந்­தோ­றும், சூ-சி அற­நிறு­வ­னம் "சூ சி சுற்­றுச்­சூ­ழல் நிலைத்­தன்மை தினம்" நிகழ்வை வெவ்­வேறு அக்­கம்­பக்­கங்­களில் நடத்தி வட்­டா­ர­வா­சி­களை மறு­சுழற்சி செய்­யக்­கூ­டிய பொருட்­களை எடுத்­து­வர ஊக்­கு­விக்­கிறது. நெகி­ழிப் பைகள், புட்­டி­கள் முத­லி­யவை வீட்­டுக் கழி­வு­களில் அடங்­கு­கின்­றன. இவை குப்­பை­யா­வ­தற்குப் பதில், மறு­சு­ழற்சி செய்­யப்­ப­ட­லாம். எனவே, கழி­வு­களைக் குறைப்­ப­தன்­மூ­லம் சுற்­றுச்­சூ­ழலை தூய்­மை­யாக வைத்­துக்­கொள்­வது பற்­றிய பொது விழிப்­பு­ணர்வை இந்த மாதாந்­திர நிகழ்வு அதி­க­ரிக்­கிறது.

சூ-சி அற­நி­று­வ­னத்­தின் நீடித்த நிலைத்­தன்மை நிர்­வாகி சூசன் டான் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு மறு­சு­ழற்­சி­யை­யும் பொது சுகா­தா­ரத்­தை­யும் உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக விளக்­கி­னார். "குடும்­பங்­கள் மறு­சு­ழற்­சியை முக்­கி­ய­மாக கரு­தி­னால், குப்­பை­யாக விளங்­கக் கூடிய கழி­வு­கள் குறைந்து துப்­பு­ர­வா­ளர்­க­ளின் பணிச்­சுமை குறை­யும்."

20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சுற்­றுச்­சூ­ழல் நிலைத்­தன்மை தினத்தை சூ-சி அற­நி­று­வ­னம் ஏற்­பாடு செய்­ததை தொடர்ந்து மக்­க­ளின் ஆத­ர­வும் கூடி­யுள்­ள­தாக குமாரி சூசன் கூறி­னார்.

"முன்­னர், சிலர் மறு­சு­ழற்சி செய்­யக் கூடிய பொருள்­க­ளு­டன் கலந்­தி­ருக்­கும் குப்பை கொண்ட பெரிய பைக­ளைக் கொண்டு வரு­வர். இவற்றை தொண்­டூ­ழி­யர்­கள் பிரிப்­பர். ஆனால், கொவிட்-19 காலம் நமக்கு சாத­க­மாக அமைந்­தது. வழக்­க­மான மறு­சுழற்சி நிகழ்­வு­களை நடத்த முடி­யா­த­தால், மக்­கள் இந்­நி­கழ்­வு­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தைப் புரிந்து­கொண்­ட­னர். இவ்­வாய்ப்­பி­னைப் பயன்­ப­டுத்தி, தொண்­டூ­ழி­யர்­க­ளின் சுகா­தா­ரத்தை இன்­னும் முக்­கி­ய­மாக கரு­தி­னர். சிக­ரெட் துண்­டு­கள், மெல்லிழைத்தாட்­கள், முகக்­க­வ­சங்­கள் ஆகி­யவை கிரு­மி­கள் நிறைந்­தவை. அவை தொண்­டூ­ழி­யர்­க­ளின் சுகா­தா­ரத்­துக்­குப் பாத­கம் விளை­விப்­பவை. பெரும்­பா­ல­னோர் தற்­போது குப்­பை­யை­யும் மறு­சு­ழற்சி செய்­யக்­கூ­டிய பொருள்­க­ளை­யும் பிரித்து வைக்­கின்­ற­னர்," என்று குமாரி சூசன் டான் நிலை­யைச் சித்­த­ரித்­தார்.

பொதுச் சுகா­தார மன்­றம் ஆண்­டு­தோ­றும் விடுக்­கும் கோரிக்­கைக்கு ஏற்ப சூ சி அற­நி­று­வ­னம் சுய­மாக தொடங்­கும் துப்­பு­ரவு நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்­கிறது. இதன்­மூ­லம், இன்­னும் தூய்­மை­யான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சமூ­கத்­துக்கு நல்­ல­தோர் உதா­ர­ண­மா­க­வும் இது விளங்­கு­கிறது.

இதற்கு எடுத்­துக்­காட்­டாக மறு­ப­ய­னீடு செய்­யக்­கூ­டிய தமது தண்­ணீர் புட்­டி­யைச் சுட்­டி­னார் திரு பே. தின­சரி வாழ்­வில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அவர் ஊக்­கு­வித்­தார். மறு­ப­ய­னீடு செய்­யக்­கூ­டிய தண்­ணீர் புட்­டி­களை எடுத்து வரு­வது நெகிழி புட்­டி­க­ளின் பயன்­பாட்டை குறைத்து கழி­வு­களை குறைக்­கும் என்று எடுத்­து­ரைத்­தார்.

குப்­பைத்­தொட்­டி­கள் இல்­லாத, துப்­பு­ர­வா­ளர்­கள் குறை­வாக இருக்­கும் பெரு­வி­ரைவு ரயில் முத­லிய பொது இடங்­கள் தூய்­மை­யா­கவே உள்­ளன. இத­னால், மக்­கள் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் கட­மை­யு­ணர்ச்­சி­யு­டன் இயங்­கி­னா­லும், அதை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­வ­தில் அவ்­வ­ளவு ஆர்­வம் கொண்­டி­ருப்­ப­தில்லை என்­பதைக் காட்­டு­கிறது.

கலந்­து­ரை­யா­ட­லின் கேள்வி பதில் அங்­கத்­தில், பல­ரும் அம­ரர் திரு லீ குவான் யூ சிங்­கப்­பூ­ரின் பொது சுகா­தா­ரத்­துக்கு ஆற்­றிய பங்­க­ளிப்­பு­களை குறிப்­பிட்­ட­னர். சுற்­றுச்­சூ­ழல் நிர்­வாக அதி­கா­ரி­யான 66 வயது திரு லோ கொக் பெங், "1968ல் திரு லீ சிங்­கப்­பூ­ரின் தூய்­மை­ப­டுத்­து­தல் இயக்­கத்தை முன்­னெ­டுத்­தார். சிங்­கப்­பூர் ஆற்­றினை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு 10 ஆண்­டு­களை அர்ப்­ப­ணித்­தார். இதனை அடுத்து, தென்­கி­ழக்­கா­சி­யா­வில் ஆக தூய்­மை­யான, நவீ­ன­ம­ய­மான பூங்கா நக­ர­மான நாடாக சிங்­கப்­பூரை மாற்­றி­ய­மைத்­தார். இந்த வர­லாற்று நிகழ்விலிருந்து, சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் அனை­வ­ரும் சமூக அக்­க­றை­யு­டன் செயல்­ப­டு­வது மிக அவ­சி­யம் என்று உண­ர­வேண்­டும்."

ஆனால், மக்­க­ளின் வாழ்க்கை நிலை­கள் மாறி­யுள்­ளதை அவர் கவ­னித்­தார். "சமீப காலத்­தில், துப்­பு­ர­வா­ளர்­க­ளை­யும் பணி­யா­ளர்­க­ளை­யும் நாம் நம்பி இருக்­கி­றோம். இதுவே வருங்­கா­லத்­தில் நமது நாட்­டின் முன்­னேற்­றத்தை தடை செய்­கின்­றன," என்று திரு லோ தெரி­வித்­தார்.

தாமே தெருக்களைக் கூட்டும் அமரர் திரு லீயின் பழைய புகைப்படம் ஒன்றினை கண்டதை திரு பே நினைவுகூர்ந்தார். அது தம் நினைவிலிருந்து அகலாது என்றும் கூறினார்.

சிங்­கப்­பூர் துப்­பு­ர­வா­ளர்­களை முழு­தாக நம்பி இருந்­தால், நிலைத்­தன்­மை­யான மேம்­பாட்­டினை நாம் காண முடி­யாது என்­பதை திரு பே வலி­யு­றுத்­தி­னார்.

"பொது இடங்­க­ளின் சுகா­தா­ரத்தை பரா­ம­ரிப்­ப­து­டன், இல்­ல­மாக கரு­தும் இந்­நாட்­டின் சுகா­தார விவ­கா­ரங்­களில் நாம் பங்கு கொள்ள வேண்­டும். மனி­தர்­கள் உண்­டாக்­கும் கழி­வு­கள் இல்­லாத, இயற்கை குப்­பை­கள் மட்­டுமே உள்ள சிங்­கப்­பூர் தெருக்­களை ஒரு நாள் காண ஆசை கொண்­டுள்­ளேன்."

முன்­னே­றும் சிங்­கப்­பூர் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக தேசியச் சுற்றுப்­புற அமைப்பு இச்­செய்­தியை வழங்­கி­யுள்­ளது.