இரண்டு மணித்­தி­யா­லங்­கள்

இரண்டு மணித்­தி­யா­லங்­கள்

9 mins read

சிறுகதை: சரவணபவன் ஆதவன்

அள­வுக்கு மீறிய அமைதி அந்த குளி­ரூட்­டப்­பட்ட அறையை விழுங்கி இருந்­தது. நான்கு பேரின் முகங்­களும் எந்த சல­ன­மும் இல்­லா­மல் ஆளுக்­கொரு திசை­யில் மற்­ற­வர்­களைப் பார்ப்­பதைத் தவிர்த்­தி­ருந்­தன.

அறை­யில் கண்­கா­ணிப்பு கேமரா மெல்­லிய சிவப்பு லைட்டை விட்டுவிட்டு மின்­னி­யது. அத­னூ­டாக எங்கோ இருந்து இவர்­களை அவ­தா­னித்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அறைக்கு வெளி­யில் காவல்­துறை அதி­காரி ஒரு­வர் நிற்­கி­றார். இடுப்புப் பட்­டி­யில் தொங்­கும் கரு­மை­நிற கைத்­துப்­பாக்கி அத­னு­டன் இன்­னும் சில தற்­காப்பு ஆயு­தங்­கள் என்று அவரை எடுப்­பாகக் காட்­டி­யது.

அறை­யின் உள்ளே இருப்­ப­வர்­கள் சாதா­ர­ண­மாக பேசி­னாலே அவ­ருக்கு கேட்­கும். ஆனால் உள்­ளி­ருப்­ப­வர்­க­ளின் வலு­வி­ழந்த பேச்­சொலி வெளியே கேட்­க­வில்லை. அங்­கும் இங்­கு­மாக கூடத்­தில் நடந்துபோகும் சக அதி­கா­ரி­க­ளுக்கு புன்­ன­கையை மட்­டும் உதிர்த்­துக்­கொண்­டி­ருந்­தார்.

கட்­ட­டத்­தின் ஓரம் சிறிய மரங்­களில் இருந்து குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­கள் அடிக்­கடி கேட்­பது இந்த அமை­தியை தொந்­த­ரவு செய்­வ­தாக உணர்­கி­றார்.

நால்­வ­ரின் முகங்­க­ளி­லும் பல­நாள்கள் அழுது கழித்த சோர்வு. இனி அழுது எது­வும் ஆவ­தற்கு இட­மில்லை என்ற மெல்­லிய தெளி­வும் கையறு நிலை­யும் அவர்­கள் மனங்­களில் பதிந்­தி­ருந்­தது அப்­பட்­ட­மாக தெரிந்­தது. ஆனால் அவ­னின் முகத்­தில் சற்று அதி­க­மா­கவே தெளிவு இருந்­தது.

இந்த சிறை­யில் இருந்த கடந்த நான்கு ஆண்­டு­களில் சாந்­தன் ஒரு சுற்று பெருத்து விட்­டான். வேலை என்று பெரி­தாக இல்லை. ஒரு பூந்­தோட்­டம் பத்­தடி அக­லம் நாற்­பது அடி நீளத்­தில் இருந்­தது. அதற்கு அரு­கில் சமாந்­த­ர­மாக அக­லம் சற்று கூடு­த­லாக ஒரு காய்­க­றித்­தோட்­டம். காலை சாப்­பாடு முடிந்து சிறிய மண்­வெட்­டி­யோடு தோட்­டத்­தில் இறங்­கி­னால் மதி­யம் சாப்­பாட்­டுக்கு அழைக்­கும் மட்­டும்தான் வேலை. யாரும் மேற்­பார்­வை­யா­ளர்­கள் என்று கழுத்­த­றுக்க மாட்­டார்­கள். வலுக்­கட்­டா­ய­மாக திணிக்­கப்­பட்ட சுதந்­தி­ரம். கட்­டுப்­பா­டான சுதந்­தி­ரம். இப்­படி ஏதோ ஒன்று அவ­னுக்கு இருந்­தது. ஒரு­வேளை அவன் மீது கரி­சனை வந்­தி­ருக்­க­லாம். அவன் கரி­ச­னையை எதிர்­பார்க்­கா­மல் தினம் தினம் காலை­யில் உழைத்­தான். ஆனால் அந்த உழைப்பு உடல் பெருக்­கத்தை தடுக்­க­வில்லை. அவனை அறி­யா­மல் உடல் வளர்ந்­த­து­தான் மிச்­சம். மற்ற நேரங்­களில் ஓவி­யம் வரை­வ­தும் நூல்­கள் வாசிப்­ப­து­மாக நேரம் கழிந்­தது. முன்­பெல்­லாம் இந்த பழக்­கங்­கள் கொஞ்­சம் கூட அவ­னுக்கு இல்லை. சின்­ன வயதில் படிப்­பும் ஏற­வில்லை. ஏதோ வாசிக்க புரிந்து கொள்ள தெரி­யும் என்­ப­தோடு சரி. வழக்கு நடந்து கொண்­டி­ருந்த சம­யம் நீதி­மன்­றத்துக்கு அழைத்து வரப்­படும் நாள்­களில் மட்­டும் அவ­னுக்கு வெளி­யு­லகை பார்க்­கும் சந்­தர்ப்­பம் அமைந்­தது.

மலே­சி­யா­வில் ஒரு ஷாப்­பிங் மாலில் காவ­லாளி வேலை பார்த்தான். சாதா­ரண வாழ்க்­கைக்கு ஏற்ற வரு­மா­னம் கிடைத்­தது. இரு­பத்­தி­யி­ரண்டு வய­தில் இருந்து சம்­பா­திக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம். இன்­னும் அறு­பது வய­தில் சிறிய வேலைக்குப் போகும் தகப்­பன் மூர்த்தி அவ­ரின் சம்­பாத்­தி­யத்­தில் ஏற்கெனவே கட்­டப்­பட்ட வீடு. குடும்­பத்­தில் வறுமை என்று இல்லை. மனி­தர்­கள்தானே. அத­னால் வரும் பேராசை இருப்­ப­தற்கு மேல் ஆசைப்­படும் சாதா­ரண மனம் உள்­ள­வர்­கள். கட­னில் கார், டிவி என்று வாங்­கிப் போட்­டி­ருக்­கும் நடுத்­தர வர்க்­கம்.

அடிக்­கடி மாறும் கால­நி­லை­போல சந்­தர்ப்­ப­மும் சூழ­லும் அவன் கட்­டுப்­பாட்­டில் இல்­லா­மல் மாறத்­தொ­டங்­கி­யதை சட்டை செய்­யா­மலே இருந்­தான்.

சாந்­த­னுக்கு காவ­லாளி தொழி­லில் எதிர்­பார்க்­காத முன்­பின் தெரி­யாத பல­ரு­டன் பழக்­கம் ஏற்­பட்­டது. அதி­லும் ஒரு­வர் சீனர் மற்­ற­வர் தமி­ழர்.

மூவ­ருக்­கும் ஒத்த வயது என்­ப­தால் இள­வ­யது பேச்­சுக்­கள் நாளாந்­தம் வேலை ஓய்வு நேரத்­தி­லும் மாலை­யில் வேலை முடிந்து வீடு போகும் போதும் இருக்­கும்.

இந்­தப் பழக்­கம் அவ­னுக்கு மேலும் பலரை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஜெகனை ஒரு கிளப்­பில் மற்ற இரு­வ­ரு­ட­னும் போன நேரம் சந்­தித்­தான். ஜெகன் நல்ல நெடு­வல் சிவலை. முடி வளர்த்து பின்­னால் சேர்த்து கட்­டி­யி­ருந்­தான்.

கைகளில் பச்சை குத்தி கையில்­லாத டிஷர்ட் போட்டு காது­களில் கடுக்­கன்­கள், கழுத்­தில் சின்­னி­வி­ரல் மொத்த வெள்ளி சங்­கிலி என்று நவ­நா­க­ரிக இளை­ஞ­னாக அறி­மு­க­மா­னான்.

சாந்­த­னும் தமிழ் பேசும் கல­கலப்­பான ஆள். நல்லா பேசுறான் என்­ப­தால் ஜெக­னு­டன் பழக்­கம் நீண்­டது. ஜெகன் அந்த பகு­தி­யில் இருந்த பெரிய கிளப்­பு­களில் மெம்­ப­ராக இருந்­தான். அவ­னு­டன் போகும் போது சாந்­த­னுக்­கும் நல்ல கவ­னிப்பு கிடைத்­தது. கொஞ்­சம் கொஞ்­ச­மாக தானும் குடித்து பழ­கி­யது ஒரு கட்­டத்­தில் பெண்­கள் சக­வா­ச­மும் வந்­தது.

சாந்­த­னுக்கு பல பெண்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தான் ஜெகன். அது மட்­டும் இல்­லா­மல் சாமான்­கள் டெலி­வரி செய்­யும் நிறு­வ­னம் ஒன்­றி­லும் நல்ல சம்­ப­ளத்­தில் வேலை கிடைக்க செய்­தான்.

மலே­சி­யா­வில் இருந்து வாரம் ஒரு தடவை சிங்­கப்­பூ­ருக்கு போகும் லாரி மரக்­கறி வகை­களை ஏற்றிச் செல்­லும்.

சில சம­யங்­களில் ராதி­கா­வும் அந்த லாரி­யில் வரு­வாள். அவள் பேசும்போது முகம் முழுக்க சிரிப்பு இருக்­கும். சாதா­ரண அழ­கு­தான் என்­றா­லும் கவ­ரக்­கூ­டிய முகம்.

சாந்­த­னுக்கு தொடக்­கத்­தில் ஒரு சந்­தே­கம் இருந்­தது. அவள் ஜெக­னின் காத­லி­யாக இருக்­க­லாம் என்று. ஏனெ­னில் இரண்டு மூன்று தட­வை­கள்­தான் கிளப்­புக்கு வந்­தி­ருப்­பாள். ஆனால் ஒதுக்­காக இருந்த பிரத்தி­யேக இருக்­கை­யில் ஜெக­னு­டன் இர­க­சி­யம் பேசு­வ­திலே அதிக நேரம் கழிப்­பா‌ள்.

சாந்­த­னை­யும் ஜெக­னின் மற்ற நண்­பர்­க­ளை­யும் பார்த்து புன்­முறு­வ­லு­டன் கடப்­பது ஒன்­று­தான் வேறு பேச்சு இல்லை. ராதி­கா­வின் தனி­மைப்­ப­டுத்­தல் சாந்­தன் மாதிரி கொஞ்­சம் இறுக்­க­மான தமி­ழர் கலா­சா­ரம் தெரிந்த நண்­பர்­க­ளுக்­கும் இந்த சந்­தே­கம் வந்­த­தில் ஆச்­ச­ரி­யம் இல்­லை­தான்.

தனது காதலி மற்­ற­வர்­க­ளு­டன் அதி­கம் நெருங்­கு­வதை விரும்­பாத கடைசித் தலை­மு­றை­யாகக் கூட இருக்­க­லாம்.

கட்­டுப்­பா­டு­களை உடைக்­கும் மேலைத்­தேய கலாசா­ரம் இ‌ன்­னு‌ம் வீரி­ய­மாக ஊட­றுக்­காத சமூ­கப் பின்­பு­லம் சாந்­த­னுக்கு அமைந்­தது.

அப்பா மூர்த்தி, அம்மா பாக்­கி­யம், தங்கை சுகந்தி என்று அவ­னு­டன் சேர்ந்து நான்கு பேர் கொண்ட குடும்­பம்.

வரு­மா­னம் தேவைக்கு செலவு செய்யக் கூடிய வகை­யில் இருந்­தா­லும் பெரிய செல­வு­க­ளுக்கு வங்கிக் கடனை நாட­வேண்­டும்.

வாரம் ஒரு தடவை போகும் சிங்­கப்­பூர் பய­ணத்­தில் ராதி­கா­வு­டன் பேசும் நீண்ட பொழு­து­கள் சாந்­த­னுக்கு அமைந்­தது.

தானும் சாந்­தனை போல ஜெக­னால் அதே நிறு­வ­னத்­தில் வேலை பெற்­ற­தை­யும் சொன்­ன­வள் என்ன வேலை என்ற விப­ரத்தை நீண்ட நாட்­கள் சொல்­லா­மல் தவிர்த்­தாள்.

"உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு சம்­ப­ளம் ஒரு டிரிப்­புக்கு?" முதல் தடவை சாந்­த­னின் சம்­ப­ளம் பற்றி விசா­ரித்­தாள்.

"ஆண்­க­ளி­டம் சம்­ப­ளத்­தை­யும் பெண்­க­ளி­டம் வய­சை­யும் கேட்­கக்­கூ­டாது," என்று பெரிய ஜோக் சொன்­ன­வன் மாதிரி சிரித்­தான்.

"அதுக்கு இல்லை. நீங்­கள் பாவிக்­கும் வாட்ச், போன் எல்­லாம் பழைய மாடல் வசதி குறை­வாக இருக்­கும் போல?" என்­றாள் மெல்­லிய சிரிப்­பு­டன். அவள் கைகளில் புது வரவு ஆப்­பிள் ஐஃபோன் இருந்­தது. மணிக்­கட்­டில் கறுப்பு நிற ஐ வாட்ச்­சும் பள­ப­ளத்­தது.

சாந்­த­னும் "மாதம் ஆயி­ரம் ரிங்­கிட் வரும். செலவுக்குச் சரியாக இருக்கும்," என்­றான் சலிப்­பு­டன்.

"நான் ஒரு தடவை மாதம் வந்து போக எனக்கு பத்­தா­யி­ரம் ரிங்­கிட் சம்­ப­ளம் தெரி­யுமா?"

இடுப்­பில் மறைத்து வைத்­தி­ருந்த பொட்­ட­லம் ஒன்றை டிஷர்ட்டை விலக்கிக் காட்­டி­னாள்.

சாந்­த­னுக்கு விளங்­கி­விட்­டது. "இதெல்­லாம் சட்­ட­வி­ரோ­தம் நீங்­கள் தப்­பான தொழில் செய்­வது போல தெரி­கிறது," புரிந்­தி­ருந்­தா­லும் அதைப்­பற்றி விலா­வா­ரி­யாக அவ­ளு­டன் பேச விரும்­பா­ம­லும் பதற்றத்தை வெளிக்­காட்­டா­மல் மீண்­டும் மெலி­தாக சிரித்­தான்.

"எந்தத் தொழி­லில் ஆபத்­தில்லை? நான் நல்ல வச­தியா இருக்­கி­றேன். உங்­க­ளுக்கு விரும்­பி­னால் ஜெக­னி­டம் பேசி இணைத்­துக்­கொள்ள வைக்­கி­றேன். என்­னை­மா­திரி பலர் இந்த தொழி­லில் இருக்­கி­றார்­கள் எல்­லா­ரும் மாட்­டு­வ­தில்லை தானே?" என்று சற்று அடங்­கிய தொனி­யில் சாந்­த­னின் மண்­டையை கழு­வி­னாள்.

ஒரு கட்­டத்­தில் அவ­னும் பரிச்­சாத்­தமா அந்த வேலையை செய்ய முற்­பட்­டான். சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்து என்று உள்­ம­னம் உந்­தித்­தள்­ளி­யது. பிறகு கைநிறைய பணம் அவனை தொடர்ந்து தப்பு செய்யத் தூண்­டி­யது. அதிஷ்­டம் எப்­போ­தும் நிரந்­த­ர­மாக இருப்­ப­தில்லை என்­பதை ஒரு­நாள் உணர்ந்து கொண்­டான்.

என்ன பேசு­வது என்று தெரி­யா­மல் மற்ற மூவ­ரும் இருந்­தார்­கள். அவன் மட்­டும் ஏதேதோ பேச்­சுக்­கொ­டுத்து மூவ­ரின் அமை­தியை தொந்­த­ரவு செய்­து­கொண்­டி­ருந்­தான்.

இந்த இரண்டு மணித்­தி­யா­லங்­கள் உற­வி­ன­ரு­டன் பேச அனு­மதி அளிக்­கப்­பட்­டது. கரு­நீ­லத்­தில் புது டெனிம் கை இறுக்­க­மான கறுப்பு வெள்ளை குறுக்குக் கோடு­க­ளு­டன் புது டிஷர்ட் தந்­தை­யார் வாங்கி வந்­தி­ருந்­தார்.

வேலைக்குப் போகத்­தொ­டங்­கிய பிறகு முதன் முதலாக அப்பா வாங்­கித்­தந்த உடுப்­பு­கள் என்று அவன் நினை­வில் பொறி தட்­டி­யது. அளவு சரி­யா­கத்­தான் இருந்­தது. சாந்­தன் அதை அணிந்து கொள்ள நாலைந்து படங்­களை தங்கை போனில் எடுத்­தாள்.

தாய் தகப்­ப­னு­டன் சேர்ந்­தும் ஒரு­ப­டம். தங்­கை­யு­டன் ஒரு­ப­டம். படம் எடுக்­கும் போதும் யாரும் யாரை­யும் சிரிக்கச் சொல்­ல­வில்லை. ஆனால் அவன் சிரித்­தான். வலுக்­கட்­டா­ய­மாக வர­வ­ழைத்த சிரிப்பு என்­றா­லும் சிரித்­தான். தாயார் வீட்­டில் இருந்து சமைத்து எடுத்து வந்த கோழி சாப்­பாட்டை பரி­மா­றி­னார். வழமை போல சுவை­யாக இருந்த சாப்­பாடு. அவன் அதை இர­சித்து உண்­டான்.

இருக்­கும் நேரத்தை வீணாக்க வேண்­டாம் என்ற தவிப்பு அவ­னில் எஞ்­சி­யி­ருந்­தது. அவனை பார்க்­கும்போது மற்ற மூவ­ரும் உடைந்து கொண்­டி­ருந்­த­னர். அவர்­க­ளின் கைகள் நடுக்­கத்­தி­லும் முக வாட்­டத்­தி­லும் கலங்­கிய கண்­க­ளி­லும் அது தெரிந்­தது.

அவனோ இயன்­ற­வரை அவர்­களை தனது செய­லால் தேற்ற முயல்­கி­றான். அந்த இரண்டு மணித்­தி­யா­லம் முடி­யும் வரை அவன் அழ­வில்லை. அழு­தும் பய­னில்லை என்­பது நால்­வ­ருக்­கும் தெரி­யும்.

பிரிவுத் துயர் மூவ­ருக்­கும் ஏனெ­னில் அவர்­கள் இன்­னும் வாழப்­போ­கி­றார்­கள். துயரை சுமந்து­கொண்டு வாழ்­வார்­கள். மக­னின் வாழ்­நாள் நினை­வு­களில், முற்­றுப்­பெ­றாத நினை­வு­களில் தாயும் தந்­தை­யும் அண்­ணனை நினைத்து தங்­கை­யும் இருப்­பார்­கள். குளி­ரூட்­டப்­பட்ட அறை­யி­லும் முத்­துக்­க­ளாக வியர்வை பூத்­தி­ருந்த முகங்­கள்.

"அம்மா இது­வ­ரைக்­கும் உங்­க­ளின் பாங்­கில் போட்­டி­ருக்­கும் பணம் எவ்­வ­ளவு வெள்ளி வந்­தி­ருக்­கும்?" சிங்­கப்­பூ­ருக்கு மரக்­கறி ஏற்­றி­யி­றக்­கும் தொழி­லுக்குப் பிறகு மேல­தி­க­மான காசை தாய் தந்­தைக்கு கூட்­டுக்­க­ணக்­கில் வைப்­பி­லிட்­டி­ருந்­தான்.

"அது இருந்­து­தான் என்ன செய்­யு­றது?" வேண்டா வெறுப்­பான தாயின் வார்த்­தை­கள்.

"இல்லை அம்மா சில தெரிந்த நண்­பர்­கள் இருக்­கி­றார்­கள் தேவைப்­பட்­டால் உதவி செய்­வாங்க."

"வேண்­டாம்டா உன்ர நண்­பர்­க­ளின் சக­வா­சம். இப்­ப­டி­யொரு இக்­கட்­டான நிலைக்குக் கொண்டு வந்­தி­வி­டு­வாங்­கள் எண்டு நான் கன­வி­லும் நினக்­கேல்ல. நாங்­கள் எங்­களைப் பார்த்­துக்­கொள்­ளு­றம்"

"இல்லை அம்மா சுகந்­தி­யும் தொடர்ந்து படிக்­க­வே­ணும் அப்­பாக்­கும் ஏலாது அது­தான்..." என்று இழுத்­தான்.

தாய் ஏதோ சொல்ல முயல தந்தை அவரை தடுத்­தார். "அவ­னுக்கு எது விருப்­பமோ அதை நாங்­கள் செய்­வம். தம்பி நீ ஒண்­டும் யோசிக்­காத" அது­வரை தன்­னு­டன் இயல்­பா­கவோ சினே­க­மா­கவோ பேசாத அவ­ரின் பரி­வான வார்த்­தை­கள் அவனை ஏதோ செய்­தது. அவ­ரும் எதிர்­கா­லம் பற்­றிய பேச்­சுக்­களை தவிர்க்­கவே விரும்­பி­னார்.

சட்­டென்று திரும்பி "சுகந்தி படிப்பு எப்­படிப் போகுது?" இறுக்­க­மாக அவ­னையே பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­வளை கேட்­டான். இது­தான் முதல் தட­வை­யாக சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கி­றாள். வழக்கு நடக்­கும் சம­யத்­தில் தாயும் தந்­தை­யும் மட்­டுமே வந்து போனார்­கள்.

"படிக்­கி­றன்" சோபை இழந்த ஒற்றை வார்த்­தை­யில் பதி­லுரைத்­தாள்.

"சிங்­கப்­பூர் எப்­ப­டி­யி­ருக்கு?"

மேலும் பதில் அவ­ளி­டம் இல்லை. எதுக்­கெ­டுத்­தா­லும் அவ­னு­டன் சண்­டைக்கு வரு­ப­வள். கல­க­லப்­பா­ன­வ­ளுக்கு இந்த அச்­சம் நிறைந்த சூழல் எதிர்­பாரா­த­வொன்று.

"அண்ணா இது­வ­ரைக்­கும் உன்­னோட ஒழுங்கா பேசக்­கூட இல்­லையே," அவ­னும் ஆமோ­திப்­பது போல தலையை அசைத்­தான். "இன்­னும் அரை மணித்­தி­யா­லம் இருக்கு தாரா­ள­மாகப் பேசு. நான் போனாப் பிறகு கவ­லைப்­பட வேண்­டாம்," என்­ற­வனை தந்தை பின்­னால் வந்து தலையை வாஞ்­சை­யாக தட­வி­னார். மீண்­டும் அமைதி குடி­கொண்ட அறை குளி­ரூட்­டி­யின் சத்­தத்­தால் மட்­டும் நிர­வி­யி­ருந்­தது. மௌன­மா­கவே வார்த்­தை­கள் பரி­மா­றப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தன. அவ­னுக்கு இந்த மணித்­தியா­லங்­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கிறது. குடும்­பத்­தி­னரை சந்­தித்து பேச இரண்டு மணித்­தி­யா­லங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

தந்­தை­யும் தாயும் இறுக கட்­டி­ய­ணைத்த கடைசி நொடி அவர்­க­ளின் இத­யத்­து­டிப்பை உணர்ந்­தான்.

கதவு திறக்­கப்­பட வெளியே இருந்து சூடான காற்று உள்ளே வந்து குளி­ரூட்­டிய அறையை விழுங்க தொடங்­கி­யது.

தங்கை திரும்பி அவ­னின் கையை நடுக்­கத்­து­டன் பற்­றி­னாள். வார்த்­தை­கள் இல்­லாத அனு­தா­பம் மட்­டுமே பரி­மா­றப்­பட்­டன.

உள்ளே வந்த காவல் அதி­காரி அவ­னின் கைக­ளின் விலங்கை மாட்­டி­னார். இன்­னொரு காவல் அதி­காரி சாந்­த­னின் உடை­மை­கள் சில­வற்றை பிளாத்­திக்கு பையில் வைத்­துக் கொடுத்­தார்.

"இதில் உங்­கள் மக­னின் ஆயி­ரம் சிங்­கப்­பூர் வெள்ளி இருக்­கிறது," என்று பர்சை தனி­யாக கொடுத்­தார். மூவ­ரை­யும் அழைத்­துக்­கொண்டு வெளி­யே­றி­னார்.

"நீங்­கள் அந்­தப்­பக்­கம் வந்து காத்­தி­ருங்­கள். பின் கதவு வழி­யாக பெட்­டி­யில் வைத்து தரு­வோம்," என்று சொன்­னது சாந்­த­னின் காதில் பட்­டும் படா­மல் விழுந்­ததுதான் தாம­தம் அது­வரை அடக்கி வைத்­தி­ருந்த ஒரு சொட்டுக் கண்­ணீர் கன்­னத்­தின் ஓரம் நழு­வி­யது.

(முற்­றும்)

(சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் முத்­த­மிழ் விழா சிறு­க­தைப் போட்­டி­யில் இரண்­டாம் பரிசு பெற்ற கதை).