விழிக்கு இமைபோல மொழிக்கு துணையாக

விழிக்கு இமைபோல மொழிக்கு துணையாக

1 mins read

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி வளர்ச்­சியை ஊக்­கு­விக்க தொண்­டாற்றி வரு­கிறது தெண்டாயுதபாணி கோயில். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் கழக நிகழ்ச்­சி­கள், கண்­ண­தா­சன் விழா, திரு­முறை மாநாடு போன்ற தமிழ்­மொழி நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தனது மண்­ட­பத்தை இல­வ­ச­மாக வழங்கி வரு­கிறது.

தொடக்­கப்­பள்ளி முதல் பல்­கலைக்­க­ழ­கம் வரை படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு ஆண்­டு­தோறும் கல்வி மானி­யங்­க­ளை­யும் உப­காரச் சம்­ப­ளங்­க­ளை­யும் வழங்கு வதுடன் தமிழ்மொழி விரு­தையும் மாண­வர்­க­ளுக்கு இக்கோயில் வழங்கி வருகிறது.

வசதிகுறைந்த உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு இலவச சக்­கர நாற்­கா­லி­களை இக்­கோ­யில் ஆண்டு­தோ­றும் வழங்கி வரு­கிறது. அத்­து­டன், சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தியர் மேம்­பாட்­டுச் சங்­கம், ஜாமியா இல்­லம், அதி­பர் சவால் ஆகி­ய­வற்­றுக்­கும் நிதி வழங்­கு­கிறது கோயில்.

ஆண்­டு­தோ­றும் மக்­க­ளுக்­காக இல­வச சுகா­தாரப் பரி­சோ­த­னை­களை­யும் இக்­கோ­யில் நடத்தி வரு­கிறது. தீபா­வளி மட்­டு­மன்றி சீனப்­புத்­தாண்டு, நோன்புப் பெரு­நாள் போன்ற கொண்­டாட்­டங்­களை­யும் சமூக மன்­றங்­க­ளு­டன் இணைந்து நடத்­து­கிறது.