விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

2 mins read
102ead1d-f973-40da-8946-5d5ceed4f365
-

சிங்­கம், கரடி, கழு­தைப்­புலி போன்ற விலங்­கு­களு­டன் நெருக்­க­மான நட்பு கொண்­டுள்­ளார் ராஜேஸ்­வரி. இள­நிலை விலங்­குக் காப்­பா­ள­ராக 'நைட் சஃபாரி'யில் பணி­பு­ரி­யும் இவர், மிரு­கங்­க­ளின் நலனை உறு­திப்­ப­டுத்­தி­யும் வரு­கி­றார்.

26 வயது ராஜேஸ்­வரி உயிர்­தொ­ழில்­நுட்­பத் துறை­யில் கால்­ப­திப்­பார் என்றே எதிர்­பார்த்­தி­ருந்­தார். ஆனால், ஆய்­வ­கத்­தில் தொழில்­நுட்ப வல்­லு­ந­ராக அவர் மேற்­கொண்ட வேலைப் பயிற்சி அவ­ரின் கண்­ணோட்­டத்தை மாற்­றி­யது.

"நான்கு சுவர்­க­ளுக்­குள் தின­மும் ஒரே மாதி­ரி­யான பணி­யில் ஈடு­பட்­டது என்னை முடக்­கி­யது," என்­றார் ராஜ­ரா­ஜேஸ்­வரி மாரி­யப்­பன்.

மாற்­றத்தை நாடிய அவர், பட்­ட­யக்­கல்வி முடிந்து வேலைக் கண்­காட்சி ஒன்­றில் விலங்­கி­யல் தோட்­டத்­தில் மிரு­கக் காப்­பா­ளர் பணி குறித்து அறிந்­து­கொண்­டார். வெள்­ளைப் புலி­கள், பனிக்­க­ர­டி­கள் முத­லிய மிரு­கங்­க­ளின் புத்­து­ணர்­வூட்­டும் உல­குக்கு அவர் அறி­மு­க­மா­னார். அவ­ருக்கு அதில் கிடைத்த மகிழ்ச்சி அலாதி.

"முதன்­மு­த­லாக புலி, கரடி போன்ற பெரிய மிரு­கங்­க­ளுக்கு அரு­கில் சென்று பழ­கும் வாய்ப்பு உற்­சா­க­ம­ளித்­தா­லும் சிறிது தயக்­க­மும் இருந்­தது. அவற்­றுக்கு உண­வூட்டி, இடங்­க­ளைச் சுத்­தம் செய்­வது மட்­டு­மல்ல இந்­தப் பணி. மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள் செய்­ய­வேண்­டும், வள­மூட்­டும் பயிற்­சி­கள் அளிக்­க­வேண்­டும். இப்­பணி எனக்கு முழு­மை­யான ஓர் உணர்வை ஏற்­ப­டுத்த வல்­லது என்று உணர்ந்­து­கொண்­டேன்," என்­றார் அவர்.

விலங்­குப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் தனது கவ­னத்­தைத் திருப்­பி­னார். மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விலங்­கி­யல், பாது­காப்பு உயி­ரி­ய­ல் துறையில் பட்­டம் பெற்றார் ராஜேஸ்­வரி. அது அவ­ரின் கண்­க­ளைத் திறந்து வைத்­தது.

அரு­கி­வ­ரும் உயி­ரி­னங்­க­ளின் பரி­தாப நிலை ராஜேஸ்­வ­ரி­யின் மனதை உருக்­கி­யது. விலங்­கு­களின் தேவை­கள் குறித்­தும் அவர் கூடு­த­லாக புரிந்­து­கொண்­டார். தனது பரா­ம­ரிப்­பில் உள்ள விலங்­கு­க­ளுக்­குச் சிறந்த நல்­வாழ்வை அளிப்­பதை ராஜேஸ்­வரி தன் இலக்­கா­கக் கொண்­டார்.

சவால்­மிக்க விலங்­குப் பரா­ம­ரிப்­பைக் குழந்தை பரா­ம­ரிப்பு போலவே பார்க்­கி­றார் ராஜேஸ்­வரி. வேலை­யால் களைத்­துப் போனா­லும் இதில் மன­நி­றைவு காண்­கி­றார் அவர்.

"ஒவ்­வொரு மிரு­கத்­துக்­கும் மனி­தர்­கள் போலவே வெவ்­வேறு குணா­தி­ச­யங்­கள் உண்டு. கோபம், சோர்வு எனச் சில நேரங்­களில் அவற்­றின் குணங்­கள் மாறும். ஆனால் அவை நம் மீது வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கையை நம்­மால் உண­ர­மு­டி­யும்," என்­றார் அவர்.

பரா­ம­ரிப்­பு­டன் நைட் சஃபாரி­யில் தனது பணி­யின் வாயி­லாக விலங்­குப் பாது­காப்பு முயற்­சி­க­ளி­லும் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார் ராஜேஸ்­வரி. வருங்­கா­லத்­தில் விலங்கு மருத்­து­வத்­தில் ஈடு­படும் ஆர்­வ­மும் அவ­ருக்கு உண்டு.