ரத்தினக்கல் பொழுதுபோக்கு வியாபாரமானது

ரத்தினக்கல் பொழுதுபோக்கு வியாபாரமானது

2 mins read
a4ecd3a9-6a2b-4957-819c-60ea65ee7c9e
-

ரத்­தி­னக்­கற்­க­ளால் கவர்ந்­தி­ழுக்­கப்­பட்ட சர­வ­ணன் காசி­நா­தன், தமது 16 ஆண்­டு­கால ஆசி­ரி­யர்ப் பணி­யிலிருந்து விலகி, பொழு­து­போக்கை முழு­நே­ர­மாக மேற்­கொள்ள முடி­வெ­டுத்­தார். ரத்­தி­னக்­கற்­க­ளின் நிறத்தை ஆராய்­வது தனது மன உளைச்­சலைப் போக்குவதாகக் கூறினார் இவர். இவரின் தனிப்­பட்ட சேக­ரிப்­பில் தற்­போது 400 ரத்­தி­னக்­கற்­கள் உள்­ளன.

இவர் 2006ல் ராசி பலன் கருதி நீல­மணி ஒன்­றினைத் தேடியபோது ரத்­தி­னக்­கல் உல­கத்­துக்கு அவர் அறி­மு­க­மா­னார். சாதா­ரண நீல­ம­ணி­ முதல் ஆக அரிய 'பப்­ப­ரட்சா' நீல­ம­ணிக்­கும் சொந்­தக்­கா­ரர் ஆனார் சர­வ­ணன்.

"ஒவ்­வொரு ரத்­தி­னக்­கல்­லும் தனித்­து­வ­மான நிறத்­தைக் கொண்­டுள்­ளது," என்­றார் சர­வ­ணன்.

வெவ்­வேறு நிறங்­க­ளி­லான ரத்­தி­னக்­கற்­க­ளைச் சேக­ரிக்க வேண்­டும் என்­பது சர­வ­ண­னின் ஆசை­யாக இருந்­தது. ஆனால் அதற்கு நிதி­யும் தேவைப்­பட்­டது. பணி­பு­ரி­யும் காலத்­தி­லேயே இந்தப் ­பொழுது­போக்­கி­லும் மும்­மு­ர­மாக இறங்­கி­னார்.

பொழு­து­போக்கை ஒரு வர்த்­த­க­மாக்­கும் யோசனை சரவணனுக்குள் உத­ய­மா­னது.

ரத்­தி­னக்­கல் வியா­பா­ரி­யா­கக் கடந்த ஆண்டு மாறிய இவர், ரத்­தி­னக்­கற்­கள் தனித்­து­வம் வாய்ந்­தவை என்றும் நிறத் துல்­லி­யமே இந்த வியா­பா­ரத்­தில் முக்­கி­ய­மா­னது என்றும் கூறினார்.

"சிறி­த­ள­வு­கூட பழுப்பு, ஊதா நிறக் கலப்­ப­டம் இருந்­தால் அதன் விலை சில நூறு வெள்ளி, சில ஆயி­ரம் வெள்ளி என வேறு­பட வாய்ப்­புண்டு," என்­றார், 'ஃபார் ஈஸ்ட்' வளா­கத்­தில் கடை திறந்­துள்ள இவர்.

"ஒரு கேரட் அள­வில் உள்ள மாணிக்­கக் கல் 400 வெள்­ளிக்கு விலை போகுமா 15,000 வெள்­ளிக்கு விலை போகுமா என்­பதை நிறம்­தான் நிர்­ண­யிக்­கும்," என்­றார் அவர்.

செதுக்­கப்­படா கற்­க­ளைச் செதுக்­கு­வ­தற்கு ரத்­தி­னக்­கல் வெட்­டு­ப­வர்­கள் தேவை. இதற்கு, வியட்­னாமில் உள்ள ஒரு­வ­ரின் சேவையை சர­வ­ணன் நாடி வரு­கி­றார்.

கற்­களை ஆராய்ச்­சிக் கூடத்­திற்கு அனுப்­பிப் பரி­சோ­தனை செய்­வ­தற்­கும் நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கும் தனிச் செல­வு­கள் உண்டு. ஆகை­யால், இது ஓர் ஆடம்­ப­ரப் பொழு­து­போக்­கு­தான் என்று ஒப்­புக்­கொண்­டார் சர­வ­ணன்.

இதன் பின்­ன­ணி­யில் பல­ரின் ரத்­த­மும் வியர்­வை­யும் உள்­ளது. சில நாடு­களில், ரத்­தி­னச் சுரங்க ஊழி­யர்­கள் வதைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அவர்­களில் சில­ரின் வாழ்க்­கையை இலங்­கை­யில் நேரில் கண்ட சர­வ­ணன் மன­மு­ரு­கி­னார்; ரத்­தி­னக்­கல் துறை பல குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­துக்கு அடித்­த­ளம் என உணர்ந்­து­கொண்­டார்.