'முதலாளிகளுக்குச் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்'

'முதலாளிகளுக்குச் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்'

3 mins read

தன்­னு­ரி­மைத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான அனு­கூ­லங்­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டா­லும் அவர்­க­ளது சம்­ப­ளமோ சேமிப்போ உய­ரும் என்று நிச்­ச­ய­மா­கக் கூற­மு­டி­யாது. எனவே அவர்­க­ளின் தேவை­களை வேலைச் சந்தை ஈடு­கட்ட வேண்­டும் என்று தமிழ் முர­சி­டம் பேசிய வல்­லு­நர்­கள் கூறி­னர்.

"தன்­னு­ரி­மைத் தொழி­லா­ளர்­களுக்­கும் முத­லா­ளி­கள் மசே­நி­திச் சந்தா செலுத்­தி­னால் அவர்­க­ளுக்­கும் நிறு­வ­னத்­திற்­காக வேலை­பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் இடை­யி­லான வேறு­பா­டு­கள் குறை­ய­லாம்," என்­றார் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மனி­த­வள நிர்­வா­கம், உள­வி­யல் விரி­வு­ரை­யா­ள­ரான ரமேஷ் சந்­தி­ர­சே­க­ரன்.

சுய­தொ­ழில் செய்­ப­வ­ருக்கு சம்­ப­ளத்­து­டன் கூடிய மருத்­துவ விடுப்பு கொடுக்­கப்­பட்­டால் அவ­ருக்­கும் வேலை­யிட ஊழி­ய­ருக்­கும் உள்ள வேறு­பா­டு­கள் குறை­யும் என்­றும் அவர் கூறி­னார்.

தன்­னு­ரி­மைத் தொழி­லா­ள­ருக்கு மசே ­நிதி சந்­தா­வைச் செலுத்த முத­லா­ளி­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வது, தற்­போ­தைய நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழ­லில் முத­லா­ளி­க­ளுக்­குச் சுமை­யாக இருக்­கும் என்­றார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் ராணி டான்.

ஓய்­வுக்­கா­லத் தேவை­கள், வீட்­டுத் தேவை­கள், மருத்­து­வச் செலவு ஆகி­ய­வற்­றுக்­குப் போதிய தொகை கைவ­சம் இருப்­பதை உறு­தி­செய்­வதே மசே ­நி­தித் தொகை நோக்­கம். முழு­நேர வேலை­யில் இல்­லா­விட்­டால் அத்­தொகை விரை­வில் கரைந்­து­போகும் அபா­யம் இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

மசே­ நி­தி­யில் இருந்து சிறு தொகை­களை வழங்­கு­வது குறித்­துப் பரி­சீ­லிக்­கு­முன், அதற்­கான வரம்­பு­கள் வலு­வாக இருக்­க­வேண்­டும் என்­றார் திரு ரமேஷ்.

அக்­கூற்றை வழி­மொ­ழிந்த டாக்­டர் ராணி, முன்­னர் மசே­நி­தித் தொகையை எடுத்­துக்­கொள்ள அனு­மதி இருந்­த­போது பலர் தங்­கள் சேமிப்­பைக் கரைத்­துத் தீர்த்த­தைச் சுட்­டி­னார்.

முழு­நேர வேலை செய்­யா­தோ­ரின் திறன் மேம்­பாட்­டுக்கு அர­சாங்­கம் தாரா­ள­மாக உத­வியி­ருப்­பதை வல்­லு­நர்­கள் சுட்­டி­னர்.

தனி­ம­னி­தர்­கள் தங்­கள் நிதி­நி­லை­மையை சொந்­தப் பொறுப்­பில் எடுத்­துக்­கொள்­ள­வேண்­டும் என்­றார் திரு ரமேஷ்.

"திறன்­களை வெற்­றி­க­ர­மாக மேம்­ப­டுத்­தும் இத்­த­கைய ஊழி­யர்­கள், அவற்­றுக்­கேற்­ற­படி கூடு­தல் ஊதி­யத்­தைப் பெற்று தங்­கள் வாழ்­நா­ளுக்­கா­கச் சேமிக்­க­லாம்," என்­றார் அவர்.

"முழு­நேர வேலை­யில் இல்­லா­தோர், வேலை செய்­யும் நாள், நேரம் ஆகி­ய­வற்­றில் அதிக நீக்­குப்­போக்கை அனு­ப­விப்­ப­தால் சுய நிர்­வா­கத்­தில் அதிக கவ­னம் செலுத்­த­வேண்­டும்," என்­றார் டாக்­டர் ராணி.

அத்­த­கை­யோ­ரின் தேவை­களை ஆராய, தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் 2015ல் 'யூஎஃப்­எஸ்இ' என்ற பிரிவை அமைத்­தது. தேசிய டாக்சி சங்­கம், தேசிய தனி­யார் வாடகை வாக­னச் சங்­கம், ஒளி, ஒலி, ஆக்­க­பூர்வ உள்­ள­டக்க நிபு­ணர்­கள் சங்­கம் போன்­றவை அதில் அங்­கம் வகிக்­கின்­றன.

ஊழி­யர்­க­ளின் வரு­வாய், வேலை வாய்ப்பு, நலன் ஆகி­ய­வற்றை வலுப்­ப­டுத்த அது முனை­வ­தா­கக் கூறி­னார் தேசிய டாக்சி சங்­கம், தேசிய தனி­யார் வாடகை வாக­னச் சங்­கம் ஆகி­ய­வற்­றின் ஆலோ­ச­கர் இயோ வான் லிங்.

"எரி­பொ­ருள் விலை உயர்வு தொடர்­பில் 'யூஎ­ஃப்­எஸ்இ' நிதி­உ­த­வித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­னோம். அனைத்­துத் தரப்­பினரும் வெற்­றி­பெற அர­சாங்க அமைப்­பு­கள், தொழில்­து­றை, ஊழி­யர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் எனப் பல்­வேறு பங்­கா­ளி­க­ளு­டன் தொடர்ந்து செய­லாற்­று­வோம்," என்­றார் திரு­வாட்டி இயோ.

முழு­நேர வேலை­யில் இல்­லா­தோரை இரண்­டாந்தர­மா­கக் கரு­தும் மனப்­போக்கு மாற­வேண்­டுமென வலியுறுத்தும் வல்­லு­நர்­கள், அனைத்து ரக ஊழி­யர்­களை­யும் ஒருங்­கி­ணைப்­ப­தில் எல்­லா­ருக்­கும் பங்குள்­ளது என்­கின்­ற­னர்.

தன்னுரிமைத் தொழிலாளர்க்கான நிதி நிர்வாக ஆலோசனைகள்

* தன்னுரிமைத் தொழிலில் அல்லது சுயதொழிலில் ஈடுபடுவதற்குமுன், உங்களுக்குக் குறைந்தபட்சமாக எவ்வளவு வருவாய் தேவைப்படும், அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்வீர்கள் எனக் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* ஈட்டும் வருவாய்க்கும் சேமிப்புக்கும் தனித்தனிக் கணக்குகளை வைத்திருங்கள். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருவாய் ஈட்டினால் உரிய நேரத்திற்குள் தொகை வந்துவிட்டதா என்பதைப் பார்வையிடுவதற்கு உதவியாக இருக்கும்.

* மத்திய சேமநிதியின் சாதாரணக் கணக்கிலும் சிறப்புக் கணக்கிலும் பணத்தைச் செலுத்துவது கட்டாயமில்லை என்றாலும் அதை நீங்களாகவே செய்வது நல்லது. பதினைந்து ஆண்டுகளில் முதன்முறையாக சிறப்புக் கணக்குகள், மெடிசேவ் கணக்குகள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் 4 விழுக்காட்டிலிருந்து 4.01 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* கூடுதல் வட்டி அளிக்கும் வங்கிக் கணக்குகளிலும் வைப்புத் தொகைக் கணக்கிலும் தொகையைச் சேமித்து வைப்பது நல்லது.