தலைமை நீதிபதி: நீதித்துறையைக் காக்க வேண்டும்

தலைமை நீதிபதி: நீதித்துறையைக் காக்க வேண்டும்

1 mins read

புது­டெல்லி: நாட்­டில் உள்ள அனைத்து அமைப்­பு­க­ளுமே மிகச்­சி­றப்­பா­னவை என்று கூற இய­லாது என உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், நாட்­டுக்­காக வடி­வ­மைத்த பல்­வேறு அமைப்­பு­களில் நீதித்­து­றை­யில் உள்ள கொலிஜியம்­தான் மிகச் சிறந்த அமைப்பு என்று அவர் குறிப்­பிட்டுள்­ளார்.

பிர­பல ஆங்­கில ஊடக நிறு­வனத்­தின் நிகழ்ச்சி டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. அதில் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் பங்­கேற்­றுப் பேசி­னார்.

அப்­போது, வெளிப்­புற தாக்­கத்­தில் இருந்து நீதித்­து­றை­யைப் பாது­காக்க வேண்­டும் என அவர் குறிப்­பிட்­டார்.

"நீதித்­து­றை­யின் சுதந்­திரத்­தைப் பாது­காப்­ப­தற்­கா­கவே கொலி­ஜி­யம் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அதை உணர்ந்து நாம் செயல்­பட வேண்­டும். நீதித்­து­றை­யைப் பாது­காக்க வேண்­டி­யது நமது கடமை," என்­றார் நீதி­பதி சந்­தி­ர­சூட்.

கொலி­ஜி­யம் அமைப்பு தொடர்­பாக மத்­திய அர­சுக்­கும் உச்ச நீதி­மன்­றத்­துக்­கும் இடையே மோதல் நிலவி வரு­கிறது.

இத்தகைய சூழ­லில் அந்த அமைப்­பின் முக்கி­யத்­து­வம் குறித்து தலைமை நீதி­பதி சந்திரசூட் பேசி இருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

கொலி­ஜி­யம் அமைப்­பின் மீது வெளிப்­புற தாக்­கங்கள் உள்­ள­தாக அவர் மறை­மு­க­மாக குறிப்­பிட்­டி­ருப்­பது நாடு தழு­விய அள­வில் புது விவா­தங்­களை எழுப்பி உள்ளது.