மோடி: தெற்கு நாடுகள்தான் சவால்களைச் சந்திக்கின்றன

மோடி: தெற்கு நாடுகள்தான் சவால்களைச் சந்திக்கின்றன

2 mins read

'இந்தியா தனது வளர்ச்சி அனுபவங்களை எப்போதுமே பகிர்ந்து வந்துள்ளது'

புது­டெல்லி: உல­கின் தெற்­குப் பகுதி நாடு­கள் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டு வரு­வ­தா­கப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார். எனி­னும் இந்­தச் சவால்­கள் அந்­நா­டு­க­ளால் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­றும் பாதிப்­பு­களை மட்­டும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

'உல­க­ளா­விய தெற்கு நாடு­களின் குரல்' என்ற கருப்­பொ­ரு­ளில் நடை­பெற்ற உச்சநிலை மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் மோடி, போர், பயங்­க­ர­வா­தம், புவி­யி­யல் பதற்­றம், உணவு, உரம், எரி­பொ­ருள் விலை உயர்வு போன்ற பல்­வேறு சவால்­கள் நிறைந்த கடி­ன­மான ஆண்டை உலக நாடு­கள் கடந்து வந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"உலக மக்­கள்தொகை­யின் நான்­கில் மூன்று பங்­கி­னர் உல­கின் தெற்­குப்­ப­குதி நாடு­களில்­தான் வசிக்­கின்­ற­னர். எதிர்­காலத்­தில் தெற்கு நாடு­க­ள்தான் உல­கில் அதிக பங்­க­ளிப்­பைத் தரப்­போ­கி­ன்றன.

"இந்­தியா தனது வளர்ச்­சி­ அனு­ப­வங்­களை எப்­போ­துமே தெற்கு நாடு­க­ளு­டன் பகிர்ந்து வந்­துள்­ளது. நமது கூட்டு வளர்ச்சி என்­பது அனைத்து புவி­யி­யல், பல்­வேறு துறை­களை உள்­ள­டக்­கி­ய­தா­கும்," என்­றார் பிர­த­மர் மோடி.

அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வது, அங்­கீ­க­ரிப்­பது, மதிப்­ப­ளிப்­பது தொடர்­பில் உல­க­ளா­விய கொள்கை உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், தெற்கு நாடு­களில் உள்ள குடி­மக்­க­ளின் நலன்­கள் உறுதி செய்­யப்­பட்டு ஒரு புதிய உலக நாடு­க­ளின் வரிசை உரு­வாக்­கப்­படும் என்­றார்.

தென்­ப­கு­தி­யில் அமைந்த நாடு­கள் கூட்­டாக இணைந்து தங்­க­ளது நோக்­கங்­கள், இதர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அம்­சங்­கள் குறித்து பொதுத்­த­ளம் ஒன்றில் பகிர்ந்துகொள்­ளும் வாய்ப்பு இம்­மா­நாட்­டின் மூலம் அமைந்­துள்­ளது என்­றும் பிர­த­மர் மோடி கூறி­னார்.

ஒரே குரல், ஒரே நோக்­கம் என்ற கருத்­தின் அடிப்­ப­டை­யில் இந்த உச்சநிலை மாநாடு நடை­பெற்­றது. ஜி20 அமைப்­புக்கு இந்­தியா தலை­மை­யேற்ற பின்­னர் நடை­பெ­றும் மாநாடு என்ற வகை­யில் இம்­மா­நாடு உலக நாடு­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

'மூன்­றா­வது பெரிய பொரு­ளி­ய­லாக இந்­தியா உரு­வெ­டுக்­கும்'

இதற்­கி­டையே, மத்­தியப் பிர­தே­சத்­தில் உள்ள இந்­தூர் நக­ரில் நடை­பெற்ற அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர், அடுத்த ஐந்து ஆண்­டு­களில் உல­கின் மூன்­றா­வது ஆகப்­பெ­ரிய பொரு­ளி­ய­லாக இந்­தியா உரு­வெ­டுக்­கும் என்­றார்.

அனைத்­து­லக அள­வி­லான பொரு­ளி­யல் நெருக்­க­டி­களை மிகச் சிறப்­பாக எதிர்­கொண்டு இந்­தியா முன்­னேறி வரு­கிறது என்று உலக வங்கி பாராட்டி இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஜி 20 அமைப்­பில் அதி­வே­க­மாக வள­ரும் பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடாக இந்­தியா இருக்­கும் என்று பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, மேம்­பாட்டு அமைப்பு (ஓஇ­சிடி) கணித்­துள்­ளது.

"உலகப் பொரு­ளி­யல் தளத்­தில் இந்­தியா முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நாடாக உள்­ளது என்று அனைத்­து­லக செலா­வணி நிதி­யம் தெரி­வித்­துள்­ளது," என்­றார் பிர­த­மர் மோடி.

தற்­போது உல­கின் ஐந்­தா­வது பெரிய பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடாக இந்­தியா திகழ்­வ­தாக குறிப்­பிட்ட அவர், அந்­நிய முத­லீட்டை ஈர்ப்­ப­தில் இருந்த தடை­கள் முற்­றி­லு­மாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் தொழில் தொடங்­கு­வ­தற்கு 50,000 அனுமதி­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பிரதமர் கூறினார்.