ராகுல்: சீனாவின் தொடர் ஆக்கிரமிப்புக்கு அமைதிகாப்பது மிகவும் ஆபத்தானது

ராகுல்: சீனாவின் தொடர் ஆக்கிரமிப்புக்கு அமைதிகாப்பது மிகவும் ஆபத்தானது

2 mins read

ஜம்மு: இந்­திய எல்­லை­யில் உள்ள நிலத்தை சீனா தொடர்ந்து ஆக்­கி­ர­மித்து வரு­கிறது. இது­வரை சீன ராணு­வம் இந்­தி­யா­வுக்­குச் சொந்தமான பகு­தி­யில் 2,000 சதுர கிலோ மீட்­டர் பரப்­ப­ளவு நிலத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. ஆனால் இந்­திய அரசோ, எது­வுமே நடக்காதது போல் அமைதி காக்­கிறது. இது மிக­வும் ஆபத்­தான செயல் என்று காங்­கி­ரஸ் எம்.பி.ராகுல் காந்தி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். இந்­திய மண்­ணில் சீனர்­களை நாட்டு மக்­கள் ஒரு­போ­தும் அனு­ம­திக்­க­மாட்­டார்­கள். இந்­தி­யக் கட்­டுப்­பாட்­டில் இருந்த எல்­லைக் காவல் பகு­தி­கள்­கூட இப்­போது சீன ராணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டுக்­குள் சென்று விட்­டது என்று லடாக் குழு தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீந­க­ரில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த ராகுல் காந்தி, "சீனா, இந்திய மண்ணில் எந்த ஆக்­கி­ர­மிப்­பும் செய்­ய­வில்லை என்ற நிலைப்­பாட்­டில் இந்­தியா இருப்­பது மிக­வும் ஆபத்­தா­னது," என்று கூறி­யுள்­ளார்.

ராகுல் காந்­திக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில், வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், "உண்­மை­யில் சீன ஆக்­கி­ர­மிப்பு காங்­கி­ரஸ் ஆட்சி செய்த 1962லேயே தொடங்­கி­விட்­டது" என்று கூறி­யுள்­ளார். இதற்குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஊட­கப் பிரி­வின் செய­லா­ள­ரும், மூத்த தலை­வ­ரு­மான ஜெய்­ராம் ரமேஷ், "சீனா குறித்த கொள்கை விவ­கா­ரத்­தில் மோடி அர­சாங்­கத்­தின் தோல்­வியை மறைத்து திசை­தி­ருப்­பும் ஒரு முயற்­சியே இது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் லடா­கில் உள்ள 65 கண்­கா­ணிப்பு மையங்­களில், 26 மையங்­களை கையா­ளும் உரி­மையை இந்­தியா இழந்­துள்­ளது," என்று கூறி­யுள்­ளார். இந்­நி­லை­யில், லடாக் எல்­லை­யில் ரூ.400 கோடி செல­வில் டெம்­சாக் - சூசோல் 135 கி.மீ.தொலை­வுக்கு புதிய நெடுஞ்­சாலை அமைக்­கும் பணியை இந்­தியா தொடங்­கி­யுள்­ளது. 2025ஆம் ஆண்­டுக்­குள் இது பயன்­பாட்­டுக்கு வரும் என்று கூறப்­ப­டு­கிறது.