ராகுல்: மக்களுக்காகவே நடைப்பயணம்

ராகுல்: மக்களுக்காகவே நடைப்பயணம்

1 mins read

ஸ்ரீந­கர்: காங்­கி­ரஸ் கட்­சி­யின் வளர்ச்­சிக்­கா­கவோ தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவோ தாம் ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை என ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

மக்­கள் வாழ்­வில் வளம் பெற­வேண்­டும் என்ற நோக்­கத்­துக்­காக மட்­டுமே தாம் பய­ணம் மேற்­கொண்­ட­தாக அவர் கூறி­னார்.

காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி குமரி முதல் காஷ்­மீர் வரை மேற்­கொண்ட ஒற்­றுமை நடைப்­ப­ய­ணம் ஸ்ரீந­க­ரில் நேற்று முன்­தி­னம் நிறைவு பெற்­றது. நிறைவு நிகழ்வை முன்­னிட்டு ராகுல் தலை­மை­யில் நடை­பெற்ற பேர­ணி­யில் திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி உள்­ளிட்ட பல்­வேறு எதிர்க்­கட்­சி­க­ளின் தலை­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

"இந்­தி­யா­வின் அடித்­த­ளத்தை அழிக்க நினைக்­கும் சித்­தாந்­தத்­துக்கு எதி­ராக நிற்­பதே எங்­கள் நோக்­கம். இந்­தி­யா­வின் தாரா­ள­வாத, மதச்­சார்­பற்ற நெறி­களை பாது­காப்­பதே இந்த நடைப்­ப­ய­ணத்­தின் நோக்­கம்.

"எனது பாட்டி இந்­திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகி­யோர் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது, தொலை­பே­சி­ மூ­லம் என்­னி­டம் அந்தத் தக­வலை தெரி­வித்­த­னர். ஒரு­வ­ருக்கு அது­போன்ற தொலை­பேசி அழைப்பு வரும்­போது ஏற்­படும் வலியை காஷ்­மீர் மக்­கள் நன்கு புரிந்­து­கொள்­வார்­கள்," என்­றார் ராகுல்.

மொத்­த­மாக 137 நாட்­களில் 3,800 கிலோமீட்­ட­ருக்­கும் அதி­க­மான தூரத்தை கடந்­துள்­ளார் ராகுல். அப்­போது பல்­வேறு தரப்­பட்ட மக்­களை சந்­தித்­துப் பேசி, அவர்­க­ளின் குறை­க­ளைக் கேட்­ட­றிய முடிந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். கொட்டும் பனிக்கு மத்தியில் நடைப்பயண நிறைவு விழா நடைபெற்றது.