புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.
உணவகங்களைத் திறந்து வைத்து அவர் பேசியபோது, “தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்கப் போராடும் மக்களுக்கு, திருப்தியான உணவு, பத்தில் ஒரு பங்கு விலையில் கிடைத்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். டெல்லி அரசு தற்போது அந்தக் கனவை நனவாக்கியுள்ளது.
அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு வழங்கும். வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்படும் உணவில் பருப்பு, சாதம், சப்பாத்தி, அந்தந்தப் பருவத்திற்குரிய காய்கறி, ஊறுகாய் ஆகியவை இருக்கும். அடல் உணவகம் டெல்லியின் ஆன்மாவாக மாறும்,” என்று அவர் கூறினார்.

