ரூ. 1,000 கோடி முதலீட்டு மோசடி: இரு சீன நாட்டவர்மீது வழக்குப்பதிவு

1 mins read
0fc189d4-aa46-47f0-81cb-edb13710f5f3
வெளி​நாட்டைச் சேர்ந்த இணையக் குற்றக் கும்பல் ​இந்த மோசடி​யில் ஈடு​பட்​டது விசாரணையில் கண்​டறியப்​பட்​டது.  - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: கொரோனா கொள்ளை நோய் காலக்கட்டத்தில் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி ரூ.1,000 கோடி சுருட்​டியதாக இரு சீனர்​கள்மீது மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அத்துறை அதி​காரி​கள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கொவிட்-19 முற்றடைப்புக் காலத்தில் ‘எச்​பிஇசட் டோக்​கன்​ஸ்’ என்ற போலி​யான கைப்பேசிச் செயலியைப் பயன்​படுத்தி பொது​மக்​களிட​மிருந்து 1,000 கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் சுருட்டியுள்ளனர்.

‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மின்னிலக்க நாணயமாகப் பணத்தைப் மாற்றித் தருவதாகவும் அதிக வட்டி தரு​வ​தாகவும் கூறி பாதிக்கப்பட்டவர்களை மோசடிப்பேர்வழிகள் ஏமாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளி​நாட்டைச் சேர்ந்த இணையக் குற்றக் கும்பல் ​இந்த மோசடி​யில் ஈடு​பட்​டது விசாரணையில் கண்​டறியப்​பட்​டது.

இந்த சதித் திட்​டத்​துக்குச் சீனாவைச் சேர்ந்த வான் ஜுன், லீ அன்​மிங் ஆகிய இரு​வரும் மூளை​யாகச் செயல்​பட்டதாகத் தெரியவந்தது.

தற்​போது அவர்​கள் இரு​வர்மீதும் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளதாகவும் இவர்களைத் தவிர்த்து மேலும் 25 தனி​நபர்​கள், 30 நிறு​வனங்​கள் ஆகியவற்றிற்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்