தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துர்க்கை சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்சியில் 13 பேர் உயிரிழப்பு

2 mins read
அவர்களில் 10 பேர் சிறுவர்கள்
b9b36fb5-058e-4a11-af54-bb0d6c9dc8b2
உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு இரங்​கல் தெரி​வித்த மாநில முதல்​வர் மோகன் யாதவ் ​தலா ரூ.4 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்​று அறிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ் திசை

போபால்: மத்தியப் பிரதேசத்​தில் இரு வேறு இடங்​களில் நடைபெற்ற துர்க்கை சிலைகளைக் கரைக்கும் நிகழ்ச்​சிகளில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான விஜயதசமி கொண்​டாட்டத்தின் ஓர் அங்கமாக, துர்க்கை சிலையை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்​டி, உஜ்ஜைனுக்கு அருகே உள்ள இங்​கோரியா நகரிலிருந்து, கரைக்கப்பட வேண்டிய துர்கை சிலைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 2) டிராக்​டரில் எடுத்​துச் செல்லப்பட்டன.

அந்த டிராக்​டரில் சிறு​வர்​களும் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.

சம்​பல் நதி​யின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்​தின் மீது அந்த டிராக்​டர் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது 12 வயதுச் சிறு​வன் திடீரென டிராக்டர் இயந்திரத்தை இயக்கியதால் வாக​னம் திடீரென ஓடி, சம்​பல் நதி​க்குள் விழுந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இச்சம்பவத்தில் சிறு​வர்​கள் 12 பேர் தண்​ணீரில் விழுந்த நிலை​யில், 11 பேர் மீட்​கப்​பட்​டனர். ஒரு​ சிறுவனைக் காண​வில்​லை.

காணா​மற்போன சிறு​வனைக் காவல்துறையினரும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, காந்த்வா மாவட்​டத்தின் அர்த்லா, ஜம்லி கிராமங்​களைச் சேர்ந்த ஏறக்குறைய 30 பேர் துர்கை சிலைகளை நீர்​நிலைகளில் கரைக்க டிராக்​டரில் எடுத்துச் சென்​றபோது, அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் சிறுமிகள் எட்டுப் பேர் உட்பட 11 பேரின் சடலங்களை மீட்டனர்.

பாரந்தூக்கி உதவியுடன் டிராக்டரை மீட்ட அவர்கள், காணாமற்போனோரைத் தேடி வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிகச் சுமை காரணமாக அந்த டிராக்டர் கவிழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வேளையில், இரு சம்பவங்களிலும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்தினருக்கு மாநில முதல்​வர் மோகன் யாதவ் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்​றும் காயமடைந்​தவர்​களுக்குத் தரமான சிகிச்சை வழங்​கப்​படும் என்​றும் அவர் உறுதி அளித்​துள்​ளார்.

குறிப்புச் சொற்கள்