தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்புத் துறையைப் பலப்படுத்த பல கோடி ரூபாய் செலவில் பெருந்திட்டம்

1 mins read
a628a14d-333d-4cea-9bc3-0cfd211df48b
தற்காப்புத் துறையில் அணுவாயுதம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் திறன்களை மேம்படுத்த இந்தியா 15 ஆண்டுகாலப் பெருந்திட்டத்தை அறிவித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தற்காப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு காலப் பெருந்திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அணு ஆயுதங்​களை ஏந்​திச் செல்​லும் நீர்​மூழ்கி கப்​பல்​கள், அடுத்த தலை​முறைக்​கான பீரங்​கி​கள், ஹைப்பர்​சோனிக் ஏவு​கணை​கள், அதிநவீன குண்​டு​களை வீசும் டுரோன்​கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தில் செயல்​படும் ஆயுதங்கள், விண்​வெளி சார்ந்த போர் தொழில்​நுட்​பங்​கள் மேம்​படுத்​தப்பட உள்​ளன.

இந்​தியா சுதந்​திரம் அடைந்த பிறகு முதல் முறை​யாக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மிகப்​பெரிய பாது​காப்​புத் துறை மேம்​பாட்​டுக்​கான திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​ம் பணிகளை மத்​திய பாது​காப்​பு அமைச்​சு தொடங்​கியுள்ளது.

புதிய திட்​டத்​தின்​படி டி-72 பீரங்​கி​களுக்கு பதில் ராணுவத்​தில் கூடு​தலாக 1,800 அடுத்த தலை​முறை பீரங்​கி​கள் இணைக்​கப்​படும். மலைப் பகு​தி​களில் போரிட 400 இலகு ரக பீரங்​கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை​கள், 700 ரோபோட்​டிக் தாக்​குதல் ஆயுதங்​கள் ராணுவத்​துக்கு கிடைக்​கும்.

கப்​பற்​படை​யில் புதி​தாக விமானம் தாங்கி போர்க் கப்​பல் இணைக்​கப்​படும். அத்​துடன் அடுத்த தலை​முறைக்​கான 10 போர்க் கப்​பல்​கள், அதி​விரை​வாக செல்​லும் சிறிய ரக போர்க் கப்​பல்​கள், செயற்​கைக் கோள்​கள், 150 தாக்​குதல் டுரோன்​கள், தொலை இயக்கி (ரிமோட்) கருவி மூலம் இயக்​கப்​படும் 100 சிறிய ரக விமானங்​களைக் கப்​பற்​படை பெறும்.

எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்​கும் வகை​யில் ஏஐ தொழில்​நுட்​பத்​துடன் கூடிய ஆயுத உற்​பத்​திக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்பட உள்​ளது என்று திட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக தனி​யார்​ செய்​தி நிறு​வனம்​ தகவல்​ வெளி​யிட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்