இருவருக்கு ஒரே வாக்காளர் அட்டை எண்

1 mins read
1b3beb61-f3f2-4e24-94c9-590584e571d6
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒரே எண் இருந்தாலும் அவர்களால் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒருவரின் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இன்னொரு வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணும் ஒரே எண்ணாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இதன் மூலம் போலி வாக்​காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாக்​காளர்கள் மேற்கு வங்கத்​தில் உள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது.

அதில், வெவ்​வேறு மாநிலங்​களில் வாக்​காளர் அடையாள அட்டை எண்கள், இரண்டு பேருக்கு ஒன்று போல் இருக்​கலாம். ஆனால், அவரவர் மாநிலங்​களில் உள்ள தொகு​திக்​குட்​பட்ட ஒரு வாக்​குச் சாவடி​யில் மட்டும்​தான் அவர்களால் வாக்​களிக்க முடி​யும்.

இரண்டு பேருக்கு ஒரே வாக்​காளர் அடையாள அட்டை எண் இருந்​தா​லும், அவர்களை போலி வாக்​காளர்கள் என்றோ அல்லது நகல் வாக்​காளர்கள் என்றோ கருது​வதற்​கில்லை.

அவர்களால் அவர்களுடைய சொந்தத் தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும். எனினும் இதுபோன்று இரண்டு பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வருவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்