தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

1 mins read

சென்னை: எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த நீதிமன்றத்தை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நேற்று திறந்துவைத்தார். சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள ஜெ. சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீது தமிழகம் முழுவதும் சுமார் 265 வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 ஊழியர்களுடன் ரூ.97 லட்சத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.