பாலியல் வழக்கின் தொடர்பில் முதியவருக்கு இரட்டை ஆயுள்

பாலியல் வழக்கின் தொடர்பில் முதியவருக்கு இரட்டை ஆயுள்

1 mins read
76f43dc8-07ad-46eb-a47b-f1d895db3b93
-

கடந்த 2012ஆம் ஆண்டு தன்னுடன் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரத்தநாடு, செம்மண் குட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்ற 56 வயது முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. மேலும் 2,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரைத்தார். படம்: ஊடகம்