நெகிழிக்குப் பதில் தாமரை இலை

1 mins read

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சிகிராமம் பேரூராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருட்களை ஒழிப்பது தொடர்பாக வியாபாரிகளுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு உணவை பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டித் தருவதற்கு பதிலாக, பாரம்பரியமிக்க தாமரை இலையில் அல்லது வாழை இலையில் வழங்கவேண்டும் என உணவக உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.