21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்

1 mins read
73494f39-b784-4655-871a-b298faf689bc
சத்தீஸ்கர் காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட்டுகள். - படம்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்புப் பணியைப் பாதுகாப்புப் படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர்.

இதன் காரண​மாகப் பல மாவோயிஸ்ட்​டுகள் சுட்​டுக்கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் மூன்றாவது வாரத்​தில் மட்டும் 238 மாவோ​யிஸ்ட்டு​கள் சரணடைந்​தனர்.

இந்​நிலை​யில், சத்​தீஸ்​கரின் பஸ்​தர் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோயிஸ்ட்டு​கள் காவல்துறை முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்துவிட்டு சரணடைந்​தனர்.

‘‘மாவோ​யிஸ்ட்​டுகள் வன்​முறையைக் கைவிட்​டு, இயல்பு வாழ்க்​கைக்குத் திரும்​பி​யுள்​ளனர். இவர்​கள் சமூகத்​துடன் இணைந்து வாழத் தேவை​யானதை பஸ்​தார்​ ​காவல்​துறை செய்​யும்,” என்று பஸ்​தர் மாவட்டக் காவல்துறை உயரதிகாரி சுந்​தர்​ராஜ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்