ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணியைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டனர்.
இதன் காரணமாகப் பல மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மட்டும் 238 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள 13 பெண்கள் உட்பட 21 மாவோயிஸ்ட்டுகள் காவல்துறை முன்பு ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.
‘‘மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழத் தேவையானதை பஸ்தார் காவல்துறை செய்யும்,” என்று பஸ்தர் மாவட்டக் காவல்துறை உயரதிகாரி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

