சென்னை: இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்குவது தொடர்பில் தமிழக அரசின் கருத்து என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தலைக்கவசம் அணிவது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாலைகளில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வோரைக் கண்டித்து ஏன் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைக்கவசம் விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
1 mins read

