திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்திறங்கிய பயணிகள் வழக்கமான சுங்கச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரைச் சோதித்தபோது அவர் தனது உடலில் 120 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்
1 mins read

