சென்னை: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலில் இதுவரை சுமார் 52 ஆயிரம் மெட்ரிக் டன் விற் பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலே சியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அம்மணலை விற்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. பின்னர் நீதி மன்ற உத்தரவின்படி அந்த மணல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் 52,000 மெட்ரிக் டன் அளவிலான மணல் விற்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின் றன. இதற்கிடையே மலேசியாவில் இருந்து மேலும் 1 லட்சம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.
மலேசிய மணல் விற்றுத் தீர்கிறது: மேலும் ஒரு லட்சம் டன் இறக்குமதி
1 mins read

