சென்னை: கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பான அளவில் உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய குழுவினர். "கஜா புயல் சீரமைப்புப் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கஜா புயல் ஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம்," என்று கூறினர்.
புயல் பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களின் சேதங்கள் குறித்து மக்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்திய மத்திய குழுவினர். படம்: ஊடகம்

