உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: டிசம்பர் 15 வரை ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: டிசம்பர் 15 வரை ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்

1 mins read

அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7ஆம் தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தமிழறிஞர் கள் கலந்துகொள்ள உள்ளனர். மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை களைப் படைக்க விரும்புவோர் அதன் சுருக்கத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. www.iatrnew. org, http://www.icsts10.org ஆகிய இணையத் தளங்களில் மேல்விவரங்களைப் பெறலாம்.