ஏர் இந்தியா விமான விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்

ஏர் இந்தியா விமான விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்

1 mins read
79830a00-7224-41e4-bf13-8ad7f9a86025
-
Google News Preferred Icon

ஸ்டாக்கோம்: ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தில் 179 பயணிகளுடன் ஓடுபாதைக்கு இட்டுச் செல்லும் துணைச் சாலையில் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விமான நிலையக் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். விபத்தில் யாரும் காயமடைய வில்லை. விமானத்தின் இரு விமானிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.