சபாநாயகரை சந்தித்த எம்எல்ஏக்கள்

சபாநாயகரை சந்தித்த எம்எல்ஏக்கள்

1 mins read

சென்னை: தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் பற்றி முழுமையாக விவாதிப்பதற்கு வசதியாகவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை முறைப்படி கேட்டுப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையிலும் பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.