தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குளிர்பானங்களுக்கு 40 விழுக்காடு வரி: உடல் பருமன் குறைப்பு நிபுணர்கள் வரவேற்பு

2 mins read
996e6423-9ba5-4c96-b67f-7be3024ef41c
கோப்புப் படம் - பிக்சாபே

புதுடெல்லி: உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் உள்ளிட்ட பொருள்​களுக்கு 40 விழுக்காடு சிறப்பு வரி விதிக்​கப்​பட​ உள்​ளது.

இந்த வரி உயர்​வால் மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வழி பிறந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும், பெங்​களூரு ஆஸ்​டர் ஒயிட்​பீல்ட் மருத்​து​வ​மனை ஆலோ​சகரு​மான டாக்​டர் பசவ​ராஜ் எஸ். கம்​பர், “மத்​திய அரசு எடுத்துள்ள 40 விழுக்காடு சிறப்பு வரி முடிவை நாம் நிச்​ச​யம் வரவேற்​க வேண்​டும்.

“உடல் பரு​மன் மற்றும் நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்​களுக்கு முக்​கிய காரணிகளாக விளங்கும் சர்க்​கரை, காஃபின் கொண்ட பானங்​களை அதி​கம் உட்​கொள்​வதைத் தடுப்​ப​தற்​காகவே இந்த வரி உயர்வு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

“புகை​யிலை, ஆல்​கஹால், சர்க்​கரை உணவு​கள், கார்​பன் ஏற்​றப்​பட்ட பானங்​கள்மீதான பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்​வால் அதை உட்​கொள்பவர்​களின் எண்​ணிக்கை நிச்​ச​யமாகக் குறை​யும்.

“சர்க்​கரை சேர்க்கப்பட்ட உணவு​கள், பானங்​களை அதி​கம் உட்​கொள்​வ​தால் இளைஞர்​களும் குழந்​தைகளும் உடல் பரு​மனால் பாதிக்கப்படுகின்றனர்.

“நீரிழி​வு மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்​சிதை மாற்ற நோய்​கள் ஏற்படு​கின்​றன.

“இந்த 40 விழுக்காடு வரி நடவடிக்கை மக்​கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்​படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும்,” எனத் தெரி​வித்துள்ளார்.

உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும் ஜாந்த்ரா ஹெல்த்​கேர் நிறு​வனத்​தைச் சேர்ந்​தவரு​மான டாக்​டர் ராஜீவ் கோவில் கூறும்​போது, “இந்​தி​யா​வில் உடல் பரு​மன், நீரிழிவு, இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளும் அதி​கரித்து வரு​கி​றது. இதில் பெரும்​பாலானவை அதி​கப்​படி​யான சர்க்​கரை உட்​கொள்ளும் போக்கினால் தூண்​டப்​படு​கின்​றன.

“இந்த பானங்​கள் மீதான வரியை உயர்த்​து​வதன் மூலம், ஜிஎஸ்டி மன்றம் ஒரு தெளி​வான முடிவை எடுத்​துள்​ளது,” என்​றார்​.

குறிப்புச் சொற்கள்