அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் 64 வயது மூதாட்டியை நரபலி கொடுத்தது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றும் அந்த மூதாட்டியின் தலையை வெட்டி நரபலி கொடுத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட மூதாட்டியின் பெயர் சாந்தி ஷா என்றும் 12 பேர் அவரை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
அசாம் தலைநகர் கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் இந்த நரபலிக் கொடூரம் நிகழ்ந்துள்ளது என்றார் அந்நகரத்தின் காவல் ஆணையர் திகந்தா பராஹ்.
"மொத்தம் 12 பேருக்கு இப்படுகொலைச் சம்பவத்தில் தொடர்புள்ளது. தற்போது ஐந்து பேர் மட்டுமே கைதாகி உள்ளனர்.
"52 வயதான பிரதீப் பதக் என்பவரின் சகோதரர் இறந்துவிட்டார். நரபலி கொடுத்தால் அவரது ஆன்மா சாந்தியடையும் என பிரதீப் நம்பியுள்ளார். இதையடுத்து மூதாட்டியை நரபலி கொடுத்துள்ளனர்," என்று காவல் ஆணையர் திகந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிலேயே மூதாட்டி கொல்லப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம்தான் அவரது உடல் கிடைத்தது. அதன் பிறகே இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது என்றும் குற்றவாளி கள் சிக்கினர் என்றும் காவல்துறை கூறியது.
இதையடுத்து மார்ச் 25ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் தேதிக்குள் அடுத்தடுத்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கோவிலில் வைத்து மூதாட்டி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அசாம் மாநில மக்களை கடும் அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது.