தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.5 கோடி, இல்லையெனில் கொலை: சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்

1 mins read
e0e02df0-ad73-4351-b977-d886ed536b6f
பாலிவுட் நடிகர் சல்மான் கான். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான் கானிடம் இருந்து மிரட்டல்காரர்கள் ரூ.5 கோடி கேட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலை மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டதாக மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் உதவித் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதாகவும் அது கூறியது.

மிரட்டல் விடுத்தவர் தம்மை மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்புக் கேட்கவேண்டும்.

“இல்லையெனில் அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவரைக் கொன்றுவிடுவோம்,” என்று அந்த மிரட்டல் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புதிய மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் பலப்படுத்தியுள்ளனர்.

கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்